Tuesday, August 21, 2012

நிழல்கள்



தொடர்ந்தும் நடந்தபோதுதான் கவனித்தேன்
எனக்கு இரண்டு நிழல்கள் விழுவதை
எங்கனம் சாத்தியம்
எல்லோருக்கும் ஒன்று தானே விழும்?


கவனமாக நடந்தேன்
சுற்றும் முற்றும் பார்த்து
ஹ்ம்..இரண்டு நிழல்களே தான்
ஒரு சந்தேகமுமில்லை


வெய்யிலிலிருந்து ஒதுங்கி நின்று கொண்டு
சிறிது நேரம் கழித்து
உடம்பை நீட்டிச் சரிபார்த்தேன்
அப்பட்டமாக இரு உருவம் நிழலாடியது


இது காரணமாகவே
கொஞ்சநாள் வெய்யிலில்
அலைவதை நிறுத்திக்கொண்டேன்
மற்றவர்க்கும் இது தெரிந்துவிடக்கூடாதே என்று
அப்படியே போயே தீரவேண்டுமெனினும்
தெருவின் கட்டிட நிழலோரங்களில் சென்று
வருவதை வழக்கமாகக்கொண்டேன்


வீட்டுக்குள்ளிருக்கும் போது
குண்டுபல்புகளின் வெளிச்சத்தில்
அவை இரண்டாகவே தெரிந்து
என்னை இன்னும் கலவரப்படுத்தியது


இதைப்பற்றிப் பிறரிடம் விவாதித்தும்
எவரும் பெரு விருப்பொன்றும் காட்டாதது
எனக்கு மேலும் வெறுப்பையே தந்தது


பிறகுதான் புரிந்தது
அனைவர்க்கும் இரண்டு நிழல்கள்
விழத்தான் செய்கின்றது
அதில் அவர்கள்
ஒன்றை எப்போதும் மறைக்கும்
வித்தை அறிந்திருப்பதை.



.

13 comments:

  1. /// அதில் அவர்கள்
    ஒன்றை எப்போதும் மறைக்கும்
    வித்தை அறிந்திருப்பதை. ///

    அருமை... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

    ReplyDelete
  2. அருமை அருமை
    அனைவருக்கும் இரண்டு முகங்களைப்போல்
    இரண்டு நிழல்களும் நிச்சயம் உண்டு
    வித்தியாசமான அருமையான சிந்தனை பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    அருமை அருமை
    அனைவருக்கும் இரண்டு முகங்களைப்போல்
    இரண்டு நிழல்களும் நிச்சயம் உண்டு
    வித்தியாசமான அருமையான சிந்தனை பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சின்னப்பயல் இல்லை பெரிய பயல் பா நீ வாழ்வின் தத்துவார்தங்களை எளிய கோப்பையில் கொட்டி குடிக்க சொல்லிகிறாய் ...............அகத்தின் நிழலை எப்போதும் மறைத்து புற நிழலை மட்டுமே கண் பட செய்கிறார்கள் ...........முகமூடி கொண்டு அழகிய வார்த்தைகளை அற்புதமாய் சொல்லி செல்லும் கவிதை அருமை

    ReplyDelete
  4. நிழல்கள் புதிரானவையா @ ராஜராஜேஸ்வரி :-)

    ReplyDelete
  5. மிக்க நன்றி ரமணி சார்

    ReplyDelete
  6. கசப்பு மருந்து இது எளிதில் குடித்து விட இயலாது @ கோவை சரளா..!

    ReplyDelete
  7. நன்றி நண்டு சார்.:-)

    ReplyDelete
  8. இரண்டு நிழலும் பல முகமும்....மனிதனைப் படித்தவர் நீங்கள் !

    ReplyDelete
  9. ஒரு மனிதனுக்கு பலமுகங்களை காணுகிறோம். அப்படியிருக்க இரண்டு நிழல்கள் மட்டும் தானோ?
    அருமையாய் கூறியுள்ளீர்கள்.
    என்னுடைய தளத்தில்
    ஏணிப்படி

    தன்னம்பிக்கை

    நம்பிக்கை

    தொடருங்கள்.

    ReplyDelete