Friday, August 10, 2012

நீங்கள் யார் ?



மின்சார ரயிலின்
வாயிலிலிருந்து அரகப்பரக்கச் சென்று
ஜன்னலோர சீட் பிடிக்கையில்
நானும் வவ்வால் மனிதன் தான்

ஊரார் பிரச்னைகளைத்தீர்த்து வைக்கும்
எனக்கு என் பிரச்னைகளுக்கு
விடை கண்டுபிடிக்கத்தெரியாத
கணங்களில் நானும் சிலந்தி மனிதன் தான்

சங்கடமான சூழல்களிலிருந்து விடுபடக்
கைவிரல்களை மடக்கிக்கொண்டு
வானத்தை நோக்கி உயர்த்திப்
பறக்க எத்தனிக்கும் போது
நானும் அதி உன்னத மனிதன் தான்

இதையும் ஒரு கவிதையென்று
நம்பிக்கொண்டு
கடைசி வரை வாசித்த
நீங்கள் யார்..?!



.

10 comments:

  1. @ நண்டு : தீவிர ஆலோசனை :-) ..ஹ்ம்...என்ன செய்வது ? இப்படித்தான் ஆகிவிடுகிறது பல சமயங்களில்//!

    ReplyDelete
  2. அப்படியா ? ஹா... ஹா...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி… (TM 4)

    ReplyDelete
  3. @ திண்டுக்கல் தனபாலன் : நன்றி தனபாலன்!

    ReplyDelete
  4. @ கவி அழகன்: ஹ்ம்...நீங்களுந்தான்

    ReplyDelete
  5. Wow. Nice poem. Vaalththukkal ullame. Mudhal varugai. Sandhippom ullame. Namma thalaththukkum konjam vaangalen?
    http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  6. வரலாம் வரலாம் @ சிகரம் பாரதி! :-)

    ReplyDelete
  7. வாசிச்ச என்னையே கிண்டலடிக்கிறமாதிரி இருக்கே.நானும் உங்களைக் கிண்டலடிச்சு ஒரு நாளைக்கு எழுதி வைக்கிறன் பாருங்கோ.கவிதை நல்லா இருந்தபடியால்தானே உயிரோசைல பிரசுரிச்சாங்க.வாழ்த்துகள் பையா !

    ReplyDelete
  8. @ ஹேமா: ஸ்விஸ்ஸிலருந்து என்னைக்கிண்டலடிங்க...நான் இங்கருந்து பாக்குறேன்... :))))))))))))

    ReplyDelete