Saturday, November 12, 2011

பறவைகளின் திசை

நவீனவிருட்சம் இதழில் வெளியான கவிதை


அன்று அந்திக்கருக்கலில்
கூட்டமாக வெண் பறவைகள்
திரும்பத்திரும்ப முன்னும்
பின்னுமாகப்பறந்து கொண்டிருந்தன
அந்தக்காரிருளில் அவை
திட்டுத்திட்டாக தெளிவாகத்தெரிந்தன

நானும் பல தடவைகள்
இருட்டிவிட்டால் அடுத்த தெருக்களில்
சுற்றிக்கொண்டு எங்கள்
வீட்டைத்தேடிக்கொண்டிருப்பேன்
அதுபோலவே அவைகளும்
தமது கூட்டின்
திசையைத்தவறவிட்டதுபோல்
எனக்குத்தோணியது

எனக்கொன்றும் புரியவில்லை
எப்போதும் அம்மா சொல்வாள்
அவை என்றும் திசை அறியக்கூடியவை
ஆதலால் ஒருபோதும் அவற்றின் திசை
தப்புவதில்லை என்று
மேலும் அவை நாடு கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
கடல் கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்

அன்று நள்ளிரவு கடந்தும்
நானும் அம்மாவும்
வீட்டு வாயிற்படியிலேயே
அமர்ந்திருந்தோம்
நான் கரு நிற வானத்தையும்
அந்தப்பறவைகளையுமே
பார்த்துக்கொண்டிருந்தேன்
அம்மாவோ வைத்த கண்வாங்காமல்
தெருக்கோடியையும்
அதன் முனையையுமே
பார்த்துக்கொண்டிருந்தாள்.



8 comments:

  1. மதி (GS) said...

    good poem boss.. enjoyed reading it and the subject selection is attractive
    7/11/11 10:18 PM

    ReplyDelete
  2. ராமலக்ஷ்மி said...

    மிக நன்று. முடித்த விதம் வெகு அருமை.
    10/11/11 6:57 AM

    ReplyDelete
  3. என்னவோ சொல்லணும் போலிருக்கு, வேணாம் என்று விட்டு விடுகிறேன்...

    ReplyDelete
  4. @சூர்யா: ஹ்ம்..புரியுது நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு ...:-)

    ReplyDelete
  5. அருமை சகோ...


    மனிதாபிமானம் தொட்டு தாய் பாசத்தில் முடித்த விதம் அருமை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி அம்பாளடியாள்..!

    ReplyDelete
  7. மிகவும் அருமையா இருக்கு கவிதை.ஒரு சின்னக் கதை சொன்னதுபோலவும்.முடித்ததுதான் இன்னும் சிறப்பு !

    ReplyDelete