Wednesday, July 20, 2011

வட்டத்துக்குள் சதுரம்



சில சதுரங்கள் கூடி
தம்மைக்கொண்டு
ஒரு வட்டத்தை
உருவாக்க முனைந்தன

சில சதுரங்கள்
அதற்கு ஒத்துக்கொண்டன
சில அவற்றை
சற்றுத்தள்ளி நின்று
வேடிக்கை பார்த்தன

ஒரு சதுரம்
நாம் எவ்வளவு தான்
முயன்றாலும்
வட்டத்தை உருவாக்க முடியாது
என வாதிட்டது

அதனை பல சதுரங்கள்
கூடி நையப்புடைத்தன
அந்தச்சதுரம் வளைந்து
நெளிந்து கோணல்மாணலாகியது
அதைப்புறந்தள்ளி விட்டு
மற்ற சதுரங்கள் மீண்டும்
தம் வேலையைத்துவங்கின

எவ்வளவு முயன்றும்
அவை தம்மைக்கொண்டு
ஒரு வட்டத்தை உருவாக்க
இயலவேயில்லை
தமது தோல்வியை
ஒத்துக்கொள்ளவும்
அவை தயாரில்லை.

தம் முனை மழுங்கினால் தான்
வட்டமாக முடியும் என்று            
அவற்றுக்கு தெரியவேயில்லை
கடைசி வரை.




.

6 comments:

  1. ramani says:
    July 15, 2011 at 1:50 pm

    Squares have to blunt their edges to go ’round’. Right! But the Squares have to blame themselves squarely for their maddening fancy. This poem however is not a square peg in the round hole

    ReplyDelete
  2. இராஜராஜேஸ்வரி said...

    தம் முனை மழுங்கினால் தான்
    வட்டமாக முடியும் என்று
    அவற்றுக்கு தெரியவேயில்லை
    கடைசி வரை.//

    அருமை. வாழ்வியல் தத்துவத்தை இவ்வளவு எளிமையாக சொல்லமுடியுமா என்று வியந்து போனேன்.
    தன்முனைப்பு நீங்கி இட் என்று ஆங்கிலத்தில் சொல்வோமே அந்த குழ்ந்தைத்தன்மை நீங்கினால்தான் வழ்க்கைச்சக்கரம் சுழலத்துவங்கும்.
    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. நன்றி இராஜராஜேஸ்வரி..

    ReplyDelete
  4. ஐயா, பேரை மாத்திக்குங்க. ஏற்கனவே ச்சின்னப்பையன்னு ஒருத்தர் இருக்கார்

    ReplyDelete
  5. @இளா : அவர் பாட்டுக்கு இருந்துட்டுப்போகட்டும்..! :-) , உங்கள் வரவிற்கு நன்றி, கொஞ்சம் கவிதை பத்தியும் கருத்து சொல்லுங்க..!

    ReplyDelete
  6. ம்ம்ம்.. சதுரத்திற்கு மூலை மனிதனுக்கு மூளை..

    இரண்டுமே மாற்றத்திற்காக தன்னை விட்டு தர நினைத்திடவேண்டும்...

    அழகிய கவிதை

    ReplyDelete