Wednesday, July 6, 2011

சின்னப்பயல் கவிதைகள்


இது எனது நூறாவது பதிவு..!

திண்ணையில் வெளியான கவிதை

ஆள்காட்டிமழை


ஜன்னல் கம்பிகளில்
தொற்றிக்கொண்டிருந்த
மழை நீரை
ஆள்காட்டி விரல் கொண்டு
ஒரு முனையிலிருந்து
மறுமுனை வரை
அழுத்தி வடித்து விட்டேன்.
மறு நாள் மழை
வரவில்லை.
ஆள்காட்டி விரல்
காரணமாயிருக்குமோ ?


அஞ்சறைப்பெட்டி

அஞ்சறைப்பெட்டியில்
அம்மா போட்டு வைத்த
மீதக்காசில்
சீரகத்தின் மணமும்
கடுகின் வாசமும்
வெந்தயத்தின் நெடியும்
மஞ்சள்பொடியின் கமறலும்
மிளகின் காரமுமாக
அடித்த வாசம்
இன்னும் என் மனதினுள்
வட்டமடிக்கிறது
அந்தக்காசில்
வாங்கித்தின்ற
மிட்டாயின் மணம்
ஏனோ நினைவில் இல்லை.

.

7 comments:

  1. ஆள்காட்டிமழை ரொம்ப நல்லா இருக்குங்க....!!!!

    ReplyDelete
  2. ramani says:
    June 28, 2011 at 9:08 am

    Rain drops running along the window rods would remind us abacus. The drops fighting the gravitation would finally succumb. No child would miss a chance to wipe the pearls. Rain is a ceaseless wonder whatever form it presents to us.
    Coins carry the smell of the childhood era. The balance coins mother stored in the provisions box is the reserve and the guilt of taking away the vital savings robs the smell and taste of the candy purchased out of such treasure.
    Poems transport me to the pristine past.

    ReplyDelete
  3. VELU.G says:
    July 2, 2011 at 6:20 am

    மனதைத் தொடும் எளிமையான வரிகள்

    ReplyDelete
  4. Su Po Agathiyalingam, Venkatesan Semmalai, Shahul M Kasim மற்றும் வேறு 11 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.

    SudhaRshan சுதர்ஷன் நூறாவது கவிதைக்கு முதலில் வாழ்த்துகள் :) அஞ்சறைப்பெட்டி மனதில் நிற்கிறது .அருமை :)
    5 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை · 2 பேர்

    Vimalathithan விமலாதித்தன் வாழ்த்துகள் ராம்
    4 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை · ஒருவர்

    ராஜ் ப்ரின்ஸ் நூறாவது கவிதையும் வன்முறை
    மென்மையான நூற்று ஓராவது கவிதையை எதிர்பார்க்கிறேன் !
    4 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை · 2 பேர்

    Ram Chinnappayal ஆள்காட்டி விரலும், மிட்டாயின் மணமும் வன்முறையா ராஜ்..?! :-)
    3 மணி நேரம் முன்பு · விருப்பம் · ஒருவர்

    பனித்துளி சங்கர் nice
    3 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை · ஒருவர்

    Ram Chinnappayal நன்றி சுதர்ஷன் :-)
    3 மணி நேரம் முன்பு · விருப்பம்

    Ram Chinnappayal நன்றி விமலாதித்தன் :-))
    3 மணி நேரம் முன்பு · விருப்பம்

    Ram Chinnappayal நன்றி பனித்துளி சங்கர்..:-))
    3 மணி நேரம் முன்பு · விருப்பம்

    Ram Chinnappayal மேலும் எனது நூறாவது பதிவை விரும்பிய அனைவர்க்கும் நன்றி.
    3 மணி நேரம் முன்பு · விருப்பம்

    Rajesh Thiyagarajan வாழ்த்துகள் நண்பரே .
    2 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை · ஒருவர்

    Shahul M Kasim வாழ்த்துக்கள் மாமு.அஞ்சறைப்பெட்டி எனது சின்ன வயசு ஞாபகம் வருது....
    2 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை · ஒருவர்

    Venkatesan Semmalai கவிதைகளை பாராட்ட வார்த்தைகள் போதவில்லை.
    ஆயிரமாவது கவிதைக்கு இப்போதே வாழ்த்துகிறேன்.
    2 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை · 2 பேர்

    Ram Chinnappayal ஆஹா,,,வெங்கடேசன் இதற்குப்பெயரல்லவா ஐஸு..! :-)) நன்றி ..!
    2 மணி நேரம் முன்பு · விருப்பம் · ஒருவர்

    Ramyaa Jesus வாழ்த்துகள் to Ram
    சுமார் ஒரு மணி நேரம் முன்பு · விருப்பமின்மை · ஒருவர்

    Anu Ashok நினைவில் நிற்கின்றன வரிகள் !
    கவிதைகள் நூறு ஆயிரம் ஆகட்டும் ,,,
    40 நிமிடங்களுக்கு முன்பு · விருப்பமின்மை · ஒருவர்

    Hema Laxmi அஞ்சறைப்பெட்டி மிக அருமை...நூறு , ஆயிரம் ...பல்லாயிரம் என வளரட்டும் உமது கவிதைகள்...வாழ்த்துக்கள்..சின்னப்பையன் பெரியப்பையனா வளர.......
    2 நிமிடங்களுக்கு முன்பு · விருப்பமின்மை · ஒருவர்

    ReplyDelete
  5. 100 பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. ஆஹா நன்றி கவிதை வீதி செளந்தர்..!

    ReplyDelete