Thursday, February 25, 2021

So baby

 


சப்தஸ்வரதேவி யுணரு.... கவிதை அரங்கேறும் நேரம்.. ஹ்ம்.. இதான் தம்பி அநிருத் இப்ப போட்ருக்கான் , க்ளாசிக்கல் வெஸ்டர்ன். ஒண்ணுல்ல. தாளம் மட்டும் 6/8-ல் (ஃபாஸ்ட்) போட்டுட்டு ராகத்தை அதன் போக்கில பாடிரலாம். ’அவள் முகம் பார்த்து’ன்னு தொடங்கும் பாடல் So baby பாட்டு. கொஞ்சம் வேகமா பாடிட்டா க்ளாஸிக்கலை மறைத்துவிடலாம். இதே ஜானர்ல ’யூ டர்ன்’ன்னு ஒரு படத்துல பேக்ரவுண்டல வரும் ஒரு பாடல். The karma Theme. அதே தான் இதுவும் அதுவும் தம்பி இசைத்தது தான். கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பாடல் இன்னொரு பாடலை ஞாபகப்படுத்தாது இருக்கவேணும் என்பது விதி. இங்கு 04:17-ல் தொடங்கும் அந்த சரளி வரிசை அப்படியே கொண்டு போய் ‘ கவிதை அரங்கேறும்’ல விடும். அடிப்படையில் இது ‘கெளரி மனோகரி’ ராகந்தான். ஐயா எம்எஸ் விஸ்வநாதன் ஒரிஜினல் ரா’ ஃபார்மெட்ல கொடுத்தை இங்க கொஞ்சம் வெஸ்ட்டர்ன் பீட்ஸ் வெச்சு உருமாற்றி கொடுத்திருக்கிறார் அநிருத். 
 
கேட்க நல்லாத்தானிருக்கு. இருந்தாலும் பழைய பல பாடல்களை நினைவு படுத்தாது இருப்பின் சாலச் சிறந்தது. தியாகைய்யரின் ’குருலேக எடுவண்டி’ தான் எல்லாத்துக்கும் மூலம். ஹ்ம்.. எவ்வளவோ உருமாறி வந்து கிடைக்குது!

இதே ராகத்தின் பேரிலேயே ஐயா எம்மெஸ்வி ‘ கெளரி மனோகரியைக் கண்டேன்’னு வாணி ஜெயராமின் குரலில் அழைத்தார். இன்னும் பீட்ஸ்களை குறைத்து அமைதியா பாடினா ’தூரத்தில் நான் கண்ட உன்முகம்’ என்று ராசைய்யாவின் வயலின் அழும். அதெல்லாம் அப்பவே சிம்ஃபொனி. அப்டீன்னு தெரியாமலேயே கேட்டுக் கொண்டிருந்தோம். அடேயப்பா இந்த ‘So baby’ எத்தனையையோ கிளறிவிடுகிறதே. பொண்ணு கன்னாலே கெளறித்தாண்டா விடுவாளுக...ஹிஹிஹி 🙂 #SoBaby

No comments:

Post a Comment