Saturday, February 20, 2021

கர்ணன்- கண்டா வரச்சொல்லுங்க

 


எண்பதுகளில் வந்த ஹிந்திப்படம் ’ஹீரோ’வில் வரும் அந்த ’லம்பி ஜுதாயி’ என்ற பாகிஸ்தானிய பாடகரின் பாடல் , பாடியவர் பாடகி ரேஷ்மா. அற்புதமான பாடல் அது. இன்றைக்கு கேட்டாலும் இனம் புரியா சோகம் மனதிற்குடி கொள்ளும். அது ராஜஸ்தான் பழங்குடியினரின் பாடல். அவ்வப்போது எல்லை கடந்து பயணிக்கும் இசை. நுஸ்ரத் ஃபதே அலிகானும் சில பாடல்கள் பாடினார். இங்கு ஜேம்ஸ் வசந்தன் இசைத்த ‘வந்தனமா வந்தனம்‘ என்ற தஞ்சை செல்வி பாடிய பாடல். அதுவும் ஒரு நாட்டார் குரல் கொண்டு இசைத்தது. பின்னர் ’அம்மாவின் சேலை’ என்ற பாடல். பின்னர் மலையாளத்தில் ’ஐயப்பனும் கோஷியும்-ல் பின்னில் ஒலிக்கும் ‘கலக்காத்த’ என்ற ஒரு பாடல். என எங்கனம் எப்போது கேட்பினும் அசரவைக்கும் அற்புதமான பாடல்கள். எத்தனை கேட்பினும் எவ்வித இசை கேட்பினும் இவை மட்டுமே மனதிற்கு நெருக்கமாக உணரவைப்பவை. இதையெல்லாம் கேட்பதற்கு 5.1 டால்பி சிஸ்டம் எல்லாம் அவசியமேயில்லை. சுசீலாம்மாவின் பல பாடல்கள் அங்கனம் இசைக்கப்பட்டு தொகுக்கப்பட்டவையே.

சநா’வும் அதே அடிப்படையில் எண்ணி சில வாத்தியக்கருவிகளை வைத்துக்கொண்டு இசைத்திருக்கிறார். வகையறா தொகையறா’க்களை வைத்து பின்னில் ராகம் எடுத்து இசைக்கும், அதே பாணி. ஆங்கிலத்தில் Verse and Chorus. இங்கு ஒரு ஓலம் போல இசைக்கும் பாடல். இழவு வீட்டுப்பாடல். ராசைய்யா செய்தது விருமாண்டியில். ஊரில ஒரு மைக் கொடுத்து , அவருக்கென சிறு கொட்டகை அமைத்துப்பாடப்பணிப்பர். அடிப்படையில் இழப்பு பற்றிய சோகப்பாடல். அது போலவே இங்கும். என்ன ஒன்று முதலிலும் பின்னர் இடையிடயே வரும் உரையாடல் போன்ற வரிகளில் இருக்கும் சோகம் , பாடும்போது இல்லை. குதூகலம் தொற்றிக்கொள்ளும் படியான ராகம்/தாளம். இருப்பினும் இதை அந்த வகைகளில் சேர்த்துக்கொள்ளலாம். நல்ல பாடல்தான் சநா.! #கர்ணன்

No comments:

Post a Comment