Saturday, February 20, 2021

வேறேலெவெல்

 


பிரபுதேவா வெளிப்படையாகவே சொன்னார் அப்போது. எனது ஆடலுக்குத்தகுந்தாற்போல இசை அமைக்க வில்லை ராசைய்யா என. அப்படி சிவகார்த்திகேயனும் இப்போது சொல்வார் ‘வேற லெவல்ல’. டி.தர்மராஜ் எழுதியிருந்ததை வாசித்தேன். ரஹ்மானிடம் யாருக்கும் விருப்பு இல்லை, அது ராசைய்யாவிடம் தோன்றிய வெறுப்பு மட்டுமே மேலும். எல்லாவற்றையும் சிறுபிள்ளைகள் போல கட்டுடைக்க நினைக்கும் செயலென்றும் சொல்லியிருந்தார். 
 
அப்படிப்பட்ட கட்டுடைப்புகள் திடும் திடும் என நிகழ்ந்தது ரஹ்மானின் காதல் ரோஜாவே என்ற காதற் தோல்விப் பாடலில். அப்படியான கட்டுடைப்புகள் இனியும் தேவையில்லை என தம்பி அநிருத், தரன் குமார் (சித்து +2) ,ஜஸ்டின் பிரபாகரன் (ஒரு நாள் கூத்து) என்று சிறுவர்களின் பட்டாளமே இசைத்துக் கொண்டிருக்கிறது இப்போது.. (இமானை இந்த வரிசையில் சேர்க்க இயலவில்லை.) இது ஏலியனின் கதை (அயலான்) , அதற்கென இசைத்தது, இன்னும் முன்னூறு ஆண்டுகள் ஆகும் விளங்குவதற்கு என தூக்கிக் கொண்டு வருவார்கள் கடினச்சாவு விசிறிகள்...ஐயோ பாவம்! #வேறேலெவெல்.

No comments:

Post a Comment