Friday, May 29, 2020

டோர்டெலிவரி

வீட்டுக்கு டெலிவரி பண்ண முடியுமா ? எல்லா மளிகை சாமானையும் தூக்கிட்டு போக முடியலை என்ற வழக்கமான டயலாக்குடன் அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமா அதே பதில் தான் சொல்லுவார்னு நினைத்து. இல்ல கரோனா முடியும் வரை டோர் டெலிவரி இல்லைன்னு சொல்வார். ஆனா இன்னிக்கு ஒரு பாட்டம் அழுதே தீர்த்துட்டார். ”இல்ல , இப்ப கட்டிக்குடுத்துக் கிட்டு இருக்கானுங்க பாருங்க எல்லாரும் அவங்க வீட்டுக்கு போகணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறாங்ய.. என்னால ஒண்ணும் செய்ய முடியலை. இந்த ஞாயிறு தான் கடைசீன்னு கெடு வெச்சிருக்கானுங்க” என்றார். எனக்கு திடுக்கிட்டது. 

அவர் தெலுங்கு, ஓரளவு கடையில் தெலுங்கு பேசுபவர்களையே வேலைக்கு அமர்ந்தியிருந்தார். இடையிடையே சில வடநாட்டுக் காரர்களும் தென்படுவர். ” இப்ப என்ன செய்றதுன்னெ தெரியலை. ஓரளவு லாக்டவுனெல்லாம் கொஞ்சம் குறைஞ்சுக்கிட்டு வர்ற நேரத்துல இவனுங்க ஊருக்கு போயே தீருவேன்னு நிக்கிறாங்ய சார்”. என்றவர் அப்படியே நின்றுவிட்டார். 

இத்தனைக்கும் கடைக்கு மேலேயே அவர்களுக்கு அறை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து அதிகம் அலையாது வேலைக்கு வர ஏதுவாக , பக்கத்துலயே ஒரு ஆந்திரா மெஸ்ஸையும் ஏற்பாடு செய்திருந்தார் என எனக்கு ஏற்கனவே தெரியும். இப்படி ஒரு இடத்தை விட்டுச்செல்ல அவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று தெரியவில்லை. ஊருக்கே சென்றாலும் அவர்களுக்கு வேலை ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. அடுத்த வாரம் சென்றால் அவரும் அவர் மனைவியும் மட்டுமே நின்று கட்டிக் கொடுப்பர் என்று நினைக்கிறேன். #கரோனாஎஃபெக்ட்

No comments:

Post a Comment