Thursday, November 14, 2019

கேட்பிதழ்

புது எழுத்து அக்டோ’2019 கேட்பிதழ் (இந்தப்பதமே அழகா இருக்கே ) வாசித்துக்கொண்டிருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஐராதம் மாகாதேவனின் ’வின் பேட்டி அத்தனையும் நன்றாக இருந்தது.
சிறுகதைகளில் சட்டென மனதில் ஒட்டிக்கொண்ட புலிக்கதை ‘குமாரநந்தனின்’. இதழுக்கு உகந்த நடை. கணபதியின் இதயத்தை உருவிச்சென்ற புலி விடாது எனது இதயத்தையும் கவர்ந்து சென்றது.
பணயம் சிறுகதை சட்டெனெ முடிந்து விட்டதைப் போன்றிருந்தது. இந்த இதழுக்கு இந்த இதழ் பேசும் கருத்துச்செறிவுக்கு ஒப்பாது பாமரப்பாணியில் அமைந்த சிறுகதை அது.

சந்தனி ப்ரார்த்தனாவின் சிங்களச்சிறுகதையின் வடிவம் ஏனோ பட்டும் படாது சிறக்கவில்லை. சொல்ல வந்த முறையில் தவறா இல்லை மொழிபெயர்ப்பில் ஏதேனும் விடுபட்டதா என்ற குழப்பம்.பாலா’வின் சிறுகதை மாய யதார்த்தத்தை சொல்ல முயன்று விலகிச் சென்று வடிவச்சிக்கலில் சிக்கி மனதைக்கவர மறுக்கிறது.
விர்ஜீனியாஉல்ஃபின் சிறுகதை மொழி பெயர்ப்பிலும் சிலிர்ப்பை ஏற்படுத்த தவறவில்லை. 


பா’ராஜாவின் கவிதையில் கோமாளி // இரவெல்லாம் அழுத கண்ணீரில் உறையாதிருந்த ஒரு துளியை விரலாற்தொட்டான்// சிறப்பு.
சுதேசமித்திரனின் ‘ஆரண்யம்’ சிறுபத்திரிகை பற்றிய குறிப்பு மிக அருமை. எனைக் கவர்ந்த நடை. அதிலும் ஜெமோ’ச்சீண்டியிருந்த வரிகள் அற்புதம் .

மொத்தத்தில் தாமதமாக வந்திருப்பினும் தற்காலத்திற்கென வந்திருக்கும் புது எழுத்து கேட்பிதழ்2019 #புதுஎழுத்து

No comments:

Post a Comment