Wednesday, November 13, 2019

#அயோத்தி.

பெரிய பெரிய ரைட்டப்லாம் எழுதுகிறார்கள் , அயோத்தி தீர்ப்புக்காக. இதைப்பற்றி பேசவேண்டாம் என்றிருந்தேன். இருப்பினும் சொல்லிவிட நினைக்கும் ஒன்றே ஒன்று. இங்க பெங்களூரில் அகரா’ன்னு ஒரு இடம் இருக்கிறது. மிகப்பிரபலமான பகுதி. அதில் ஒரு ஆஞ்சநேயர் சிலை கிட்டத்தட்ட 200அடிகள் இருக்கலாம், ஓங்கி உயர்ந்து நிற்கும். கற்சிலைதான் அத்தனை அழகிய வண்ணங்கள் பூசப்பட்டு ஜொலிக்கும். அதன் தொட்டடுத்து ஓரடிபோலும் இடைவெளி இல்லாது ஒரு பள்ளி வாசலின் மினரட் (கோபுரம்) அதோடு கூடிய பள்ளிவாசல் கட்டப் பட்டிருக்கும். பாங்கு ஒலியும் எழும் நேரத்துக்கு. 

இன்னும் முடியவில்லை. அதனையும் தொட்டடுத்து ஒரு ஒரிஸ்ஸா பாணியில் அமைந்த ஜெகந்நாதர் ஆலயமும் இருக்கிறது. வடநாட்டு பாணியில் ஒவ்வொரு கோபுரத்திலும் காவிக்கொடி பறந்து கொண்டிருக்கும். பஜனைகள் காதைத்துளைக்கும் , அந்த மேம்பாலத்தை கடந்து செல்லும்போது. மூன்று வழிப்பாட்டுத் தலங்களும் நூறடிக்கு உள்ளேயே அமைந்திருக்கும்.அது தான் சிறப்பு,

நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பது தவறுதான். இருப்பினும் இதைப்போல மஸ்ஜிதும், கூடவே ராமனும் அருகருகே இருந்து அயோத்தியில் அருள் பாலித்திருக்க நீதி வழிவகை செய்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன், #அயோத்தி.

No comments:

Post a Comment