Monday, December 10, 2018

பேட்ட பராக்!



வணிக நாயகருக்கு நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. மேடையில் சிவப்பு துண்டு போட்டு ஒரு இளைஞர் பிரமாதமாக அவரின் அத்தனை வேஷங்களையும் அபிநயித்துக்காட்டிக் கொண்டிருந்தார். உண்மையிலேயே நல்ல கலைஞர் அவர். அப்படியே செய்து காட்ட நிறையப்பேர் இருந்ந்த போதும் அவரின் அத்தனை அசைவுகளும் வணிக நாயகனைப்போன்றே அச்சசல் அமைந்திருந்தது, எத்தனை பேர் கவனித்தீர்கள் , ரஜினி அந்த இளைஞரை கட்டை விரலை உயர்த்தி புன்முறுவலுடன் பாராட்டியதை.  ஆடின காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது.

 அரசியல் கிரசியல்னு இவங்க தேவைக்காக இழுக்குறாங்ய. பேசாம நற்பணி மன்றமாகவே வைத்துக்கொண்டு இன்னும் பல உதவிகள் செய்ய இயலும்.  ஜிகர்தண்டா'வில் பாபி சிம்ஹாவின் கேரக்டரை எனக்கு ஏன் கொடுத்து இருக்கக்கூடாது என்ற அவரின் ஆதங்கம். ஹ்ம்.. படம் வேற லெவலுக்கு போயிருக்கும். இப்போதும் என்ன பேட்ட'யில் இன்னமும் கலக்குவார். தம்பி அநிருத் கிடைத்த வாய்ப்பை அப்படியே கபளீகரம் செய்து கொண்டு இறங்கி வேலை பார்த்திருக்கிறார்.

அத்தனை பாடல்களும் அற்புதம். கல்யாணப்பாடல் என்னவோ வேறு ஜானரில் இருக்குமென நினைக்கிறேன். உல்லாலா உல்லாலா லத்தீன் அமெரிக்க பாணியில் ஆந்தோனியோ பந்தேராஸ் போல கையில் கிட்டார் வைத்துக்கொண்டு ...ஆஹா...பாராட்ட வார்த்தைகளே இல்லை.  பேட்ட பராக்..வேற லெவல் இன்னமும் கேட்கவேணும்.

இது பழைய 'முள்ளும் மலரும்' காளியை, 'முரட்டுக்காளை' காளையனை, 'ஊர்க்காவலன்' காங்கேயனை மீளக்கொணரும் எனவே தோன்றுகிறது. கார்த்திக்கிற்கு அந்த ஜிகர் தண்டா ஒரு படம் போதும். நான் லீனியரில் கதை சொல்ல இப்போதைக்கு யாரும் இல்லை தமிழுலகில். இளைஞர்களுடனும் சேர்ந்து வெலை செய்ய ஒப்புக்கொண்டதற்கு ரஜினிக்கு வாழ்த்துகள். கேமரா முன்னால் நிற்கவில்லை மில்லியன் சனங்கள் முன்னால் நிற்கிறார் எத்தனை அற்புதமான கூற்று. ரோபோ கீபோல்லாம் வேணாம்டா. அவர் பழைய பரட்டை'டா ங்கொய்யால. #பேட்டபராக்!

1 comment:

  1. //நான் லீனியரில் கதை சொல்ல இப்போதைக்கு யாரும் இல்லை தமிழுலகில்//
    வடசென்னை இன்னும் பார்க்கவில்லையா?

    ReplyDelete