Sunday, April 8, 2018

பத்மாவதி ..இல்ல பத்மாவத்



பத்மாவதி ..இல்ல பத்மாவத் இன்னிக்கு தான் பார்க்கமுடிந்தது. பாகுபலிக்கப்புறம் தான் பத்மாவதி அப்டி சொல்றதுல எனக்கு எந்தவித ஐயமும் இல்லை. சொல்லப் போனால் இரண்டும் வேறு வேறு. பொழுது போகணூம்ல அதான். இருந்தாலும் படம் ரொம்பவே நீளம் வெட்டிச்சுருக்கீருக்கலாம்.ஆர்ப்பாட்டமான நடிப்பு ரன்பீர் கபூர், அதுக்கு கொஞ்சமும் சம்பந்தமேயில்லாத ராஜ்பூத் ஷாஹீத் கபூர். இடுக்கல்ல சிக்கின எலி மாதிரி இருக்கான். ஆர்ம்ஸ், ஸிக்ஸ் பேக்லாம் காமிச்சாலும் ரன்பீர் கபூர்க்கு பக்கத்துல கூட நிக்க முடியாது. அலாவுதீன் கில்ஜி பாடத்துல படித்தது. கில்ஜியின் கைத்தடி மாலிக் கஃபூர் எங்க ஊரு பரமக்குடி வைகை ஆத்துக்கு அந்தக்கரை வரைக்கும் வந்துட்டான்னு சொல்லுவார்கள். அப்போது பரமக்குடீல்லாம் பாண்டிய நாடு..ஹிஹி அத்தனை பெரிய சாம்ராஜ்யத்துக்கு சொந்தக்காரன் ஜஸ்ட் லைக் தட் ஒரு பெண்ணுக்காக இப்டி அலைஞ்சான்னு ஹ்ஹ்ஹி… தீபிகா’வுக்காக அலையலாம். ஹ்ஹி..


அரண்மனை, வேலைப்பாடுகள், உடையலங்காரங்கள் ஒக்காந்து ரூம் போட்டு யோசிச்சு செஞ்சிருப்பார் போல சஞ்சய் லீலா பன்சாலி. சம்பவம் பண்ணீருக்கான் மச்சான், செமடா.. ஷாஹீத் கப்பூருக்கு உடம்பு தான் பிரச்னை, அரச உடுப்புகள்லாம் போட்டவுடன ஸ்கூல் போற சின்னப்பையன் மாதிரி தெரியிறார். அதான். எப்பவுமே மனதில் ஒரு சோகம். என்னதான் ராஜ்பூத் வீர்ர்கள்னு சொல்லி சொல்லி கூவினாலும் முகத்துல அந்த தைரியம் தெரியமாட்டேங்குது ரன்பீர் ஆர்ப்பரிக்கிறார் உடலும் திமிரும் தாண்டவமாடுது உடலிலும் முகத்திலும். அறிமுகமே அமர்க்களம். நெருப்புக்கோழியை பரிசாக கொண்டுவந்து மகளை பெண்கேட்கிறார். அமீர் குஸ்ரூ அலாவுதீன் கில்ஜியின் ஆஸ்தான கவியாக இருந்திருக்கிறார் போலருக்கு.அடிக்கடி அவரையும் காண்பிக்கின்றார்கள். நேற்று தான் குஸ்ரோவின் கல்லறைக்கு சென்று வந்தேன்.இங்கு டெல்லி நிஜாமுத்தீனில்.

தனியாளாக மேவார் அரண்மனைக்கு செல்லுவதும் ஷாஹீதுடன் செஸ் விளையாடுவதும்,உணவுத்தட்டுகளை உதட்டோர ஏளனத்துடன் திருப்பி திருப்பி எதிலாவது விஷம் வைக்கப்பட்டிருக்குமாவென சந்தேகத்துடன், ஒரு தடவை கூட எதிரியை நம்பாமலிருப்பதும் ஆஹா. செம வில்லண்டா. வரலாறு சொல்கிறது மிகத்தைரியமான, பலம் வாய்ந்தவன் இந்த அலாவுதீன் கில்ஜியென. அதை ரன்பீர் கபூரின் நடிப்பு ஜஸ்ட்டிஃபை செய்கிறது 



அழகுப்பதுமை தீபிகா. இப்பதான் எச்.பீ.ஓ’வில XXX Return of Xander Cage பார்த்தேன்,. அதுல கொஞ்சம் எடக்கு மடக்கான வசனங்கள்லாம் கூட பேசுவார். லண்டன் பிக் வீலை, அம்மணமாக குறிப்பிட்ட சில மணித்துளிகளில் ஏறிக்காண்பித்தேன் என்பார். ஹிஹி. இங்க முழுதும் போர்த்திக்கொண்டு ராஜபுதன இளவரசி. ஹ்ம். இதுவும் நல்லாத்தான் இருக்கு. இவர் நடித்த ஒரு நெஸ்கஃபே விளம்பரம் எல்லா பச்சிளம் பாலகர்களும் கண்டு மகிழ்ந்தது. சரக்கென குறுவாளை எடுத்து ஷாஹீதின் நெஞ்சில் சிறு கோடிழுத்து இன்னமும் காயம் சரியாகவில்லை. இங்கிருந்து உங்களால் செல்ல வியலாது என்பார். அத்தனையும் காதல். ஆஹா. ஒவ்வொரு தடவையும் ஷாஹீத் போருக்கு புறப்படும் போதெல்லாம் கண்ணோர மையை எடுத்து பொட்டு வைக்கிறாள் அவனின் கன்னத்தில்..திருஷ்டி!



ஆமா தமிழ் வசனங்கள்லாம் கொழிக்குதே படத்துல. யார் வொர்க் பண்ணியது ? சாம்பிளுக்கு சில. “வண்ணங்களாலா இல்லை வாட்களாலா ?” “ காதலுக்கும் போருக்கும் இலக்கணங்கள் இல்லை”. “ மான் வேட்டையாடச்சென்ற எனக்கு சிங்கமல்லவா கிட்டியது?” இந்தப் பாலைவனத்தில் என்னால் கடல் அளிக்க இயலாது அது உங்கள் கண்களிலிருக்கிறதே” “ மனதில் படிந்தது சொற்களில் படிவதில் என்ன ஆச்சரியம்?” “அலாவுதீன் மீது அல்லாவே கூட நம்பிக்கை வைப்பதில்லை”

படம் முழுக்கவே பெண்ணாசையை அடிப்படையாகக்கொண்டதே. அவளே முடிவெடுக்கிறாள். இத்தனைக்கும் ராஜமாதா தடுத்தும் தானே புறப்பட்டு தம் காதலனை விடுவிக்க டெல்லி வரை செல்கிறாள். செம டஃப் ஃபைட் குடுத்தது மேவார் அரசு தான் போல கில்ஜிக்கு. 



ஆறு மாதங்கள் போர் தொடுக்காது அரண்மனைக்கு வெளியே காத்தே கிடக்கிறது கில்ஜியின் படைகள். பிறகு சமாதானப்புறா செல்ல உள்ளுக்குள் அத்தனை வன்மங்களும் கொண்டு. நான் உன்னை அழைக்கிறேன் நீ என்னை அழைப்பாயா என. அப்படியும் தீபிகாவின் முகம் காண வாய்க்கவில்லை கில்ஜிக்கு அந்தக்காட்சி மிகப் பிரமாதம். அவளை அவளின் அரண்மனையில் வைத்துப்பார்த்தே ஆகவேணும் என்ற பிடிவாதத்துடன் நிற்கும் கில்ஜியை கண்ணாடியில் புகைகளினூடே பார்க்க வைக்கிறாள்.அதிகமாக ஹிந்து கார்ட் பயன்படுத்தவில்லை,அவ்வப்போது அரசி சிவலிங்கத்துக்கு பூசை செய்வதுடன் காட்சிகள் முடிகின்றன. 

அந்த மாலிக் கஃபூர் (ங்கொய்யால பரமக்குடி வரைக்கும் வந்தவன்) ஆக்டிங்க் அப்படியே தூக்கிக்கொஞ்சலாம் போலருக்கு. (கடைசில இந்த கஃபூர் தான் அலாவுதீனையே போட்டுத்தள்ளினானாம் என வரலாறு கூறுகிறது.) திருநம்பி கதாபாத்திரம், அவர் பாடும் ஒரு அரேபியப்பாடல் ‘பிந்தே தில்’ மிக அருமை. டெஸர்ட் ரோஸ் கேட்டுப்பாருங்க அதே எஃபெக்ட் வரும். எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடாமல் அந்த ஊரின் இசை., அதையும் தமிழ்ப்படுத்தியிருப்பது கொஞ்சம் இடிக்குது. அதைத்தவிர வேறெந்தப்பாடலும் எனைக்கவரவில்லை. பொதுவாவே ஹிந்தி ஹிந்துஸ்தானி பாடல்கள் தமிழுக்கு தமிழ் மண்ணுக்கு ஒவ்வாதவை. அவ்வளவு தான்.  ரஹ்மான் எதோ கொஞ்சம் மிக்ஸ் பண்ணி அடிக்கிறார்ங்கறதுக்காக அவரின் பாடல்களைக் கேட்க முடிகிறது. அவர்களின் ஒரிஜினல் மண்ணின் இசையென்றால் ஓட்டம் தான் பிடிப்பேன், 



வகை தொகையில்லாமல் கொலைகள். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. அதுவும் அந்த மங்கோலியனின் தலையையும், ஜலாலுதீனின் தலையையும் குத்தீட்டியில் குத்தி எடுத்து வருவெதெல்லாம் குரூரம். அலாவுதீனையே போட்டுத் தள்ள நினைப்பவனை கழுத்தை மட்டுமே நெருக்கி அதுவும் ஒற்றைக் கையாலேயே ..ஹ்ஹூம்.. கொடுமை. இருந்தாலும் மேவார் படைத்தளபதி தலையைக்கொய்த பிறகும் அவரின் உடல் கொஞ்ச நேரத்துக்கு காற்றில் வாள் வீசுகிறது என்பதெல்லாம் ஹிஹி..

இந்தப்படத்துக்கா இவ்வளவு பிரச்னை பண்ணினாங்க இந்த சங்கி மங்கிகள். அப்படி ஒன்றுமேயில்லையே
J  கேரக்டர்களுக்கு முகங்கள் மிக முக்கியம். அப்பதான் ஆதெண்ட்டிக்காக தெரியும். அந்த படைத்தளபதி உல்லாகான் அற்புதம். அப்படியே ஆஃப்கன் பஷ்தூன் முகம். இப்படி சில சில நகாசு செய்திருப்பதும் படத்தை அமர்ந்து பார்க்க வைக்கிறது. காற்று வெளியிடை தலைவி அதிதி இங்க கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருப்பது தெரிகிறது. இவரும் படம் முழுக்க வருகிறார்.  சிஜி வொர்க் நிறைய செய்திருப்பார் போலருக்கு சஞ்சய் லீலா.

கிஞ்சித்தும் படை போர் விதிமுறைகள், நடபு பாராட்டல்கள் என எதுவுமேயில்லாத கில்ஜியும், அத்தனையையும் முறையே செய்யவேணும் என்ற மேவார் ராணாவும் அதையே சிரமேற்கொண்டு தம் நாட்டிற்கு பங்கம் வராத வரையில் முடிவுகளை எடுக்கும் பத்மாவதி அரசி என வழக்கம்போல முடிவுதான். வெகுவாக யூகிக்க முடிவது ஒரு பெரும் குறை.




.

 .

2 comments:

  1. கில்ஜியாக நடித்திருப்பது ரன்பீர் கபூர் இல்லை அது
    ரன்வீர் சிங்.
    ரன்வீர் சிங் தீபிகாவின் காதலரும் கூட.

    ReplyDelete
    Replies
    1. வட இந்தியரின் பெயர்கள் அத்தனை சுலபமில்லை நினைவில் வைத்துக்கொள்ள... :)

      Delete