Wednesday, May 4, 2016

நத்தைகள்


போதி மரத்து
இலைகளும்
உதிர்கின்றன


***** 

கடந்து சென்ற
உன்னால்
நிழல் படுவதை
தடுக்கமுடியவில்லை


****

மெதுவாக நகரும்
நத்தை
மழைக்காலத்திலிருந்து
வெயிற்காலம் வரை


****

கவிதைகளை
ரசிக்கவேணுமென்றில்லை
உருவாக்க உதவுகிறாய்
அது போதும்


****

என்ன பிடிக்கும்
எனத்தெரிந்தால் கொடுத்துவிடலாம்
இல்லையேல்
முத்தம் தான்
கொடுக்கவியலும்


****

உன்னில் ஆர்வமுண்டாக்க
என்னில் இந்தக்கவிதைகளைத்தவிர
வேறேதும் இல்லை


****

ஈர்ப்பு விசையில்லா இடத்தில்
பொழிந்த மழை எனது
உனை வந்து சேரவேயில்லை


****

எனக்கும் அலகு இருந்திருப்பின்
கண்ணாடியை
கொத்திக்கொண்டுதானிருப்பேன்


****

கோடைச்சிறுநீர் போல
உன் அன்பு
சிறுத்துவிட்டது


****

பிறர் இரங்கற்பா
பாடுமளவுக்காவது
கொஞ்சம்
எழுத வேணும்


****

நாட்காட்டியின்
தாளைக்கிழிப்பது போல்
அத்தனை சுலபமில்லை
இந்த நாளைக்கடத்துவது


••••••••


மலைகள் இதழில் வெளியானவை
http://malaigal.com/?p=8136

1 comment:

  1. சிறப்பான கவிதைகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete