Tuesday, June 4, 2013

நீயும் நானும்



எதிலும் முதல்
என்பது
கடைசி வரை
ஞாபகத்தில் இருக்கிறது


ஒவ்வொரு முறையும்
எனை நீ
விலக்கும்போதும்
மீளச்சேர்வாய் என்ற எண்ணமே
என்னை உயிர்ப்புடன்
இருக்க வைக்கிறது


 இந்தப் பரிசுப் பொருட்களை எல்லாம்
நீ திரும்பக் கொடுக்கும்போது
எவையும் என்னைத் தைக்காத வகையில்
தேர்ந்தெடுத்திருக்கிறேன்

                                                                       
                                                    தினமும் பிணத்தை
                                                    எதிர்நோக்கி அதை
                                              வெளிச் சொல்லவியலாத
                                               வெட்டியானின் புழுக்கம்
                                                     உன் வருகையை
                                                     நோக்கிய எனதும்.

                                                             


.

6 comments:

  1. மனதின் வலி புரிகிறது.

    ReplyDelete
  2. படங்களும் அதற்கேற்ற கவி வரிகளும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. எதிலும் முதல்
    என்பது
    கடைசி வரை
    ஞாபகத்தில் இருக்கிறது// உண்மைதான்... நல்ல கவிதை

    ReplyDelete
  4. கவியாழிக்கு நன்றி

    ReplyDelete
  5. தனபாலன் தொடர் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. ஹ்ம்..பிரியாவின் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

    ReplyDelete