Monday, March 4, 2013

நல்லிணக்கம்




நண்பன் அன்சாரி வீட்டில்
தேநீரருந்தப் போயிருந்தேன்
வெகுநாட்களாக
வருந்தி வருந்தி அழைத்தபின்.
அடுக்களைக்குள்
அதிக வெளிச்சமில்லை
சுவிட்ச்சைத்தட்டியவரின்
கால்களில் எதோ குதித்து
இருட்டுக்குள் ஓடி மறைந்தது
‘என்ன சத்தம் என்றேன்’
இங்கிருந்தவாறே
தட்டுத்தடுமாறியவன்
உரத்துக் கூவினான்
‘இந்த எலிச்சனியன்
என் கால்களுக்குள்
வந்துவிட்டது’ என்று



5 comments:

  1. ஹா... ஹா... எலியை தான் சொன்னார்...

    ReplyDelete
  2. ஹாஹா @ தனபாலன்..நன்றி :)

    ReplyDelete
  3. நல்லிணக்கம் மாதிரி தெரியலையே..

    ReplyDelete
  4. அன்பின் சின்னப் பயல் - எலிச்சனியன் படுத்துகிற பாடா ? மிக மிக இரசித்தேன் சிரித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete