Friday, February 1, 2013

கண்ணாடிக்குவளை

ஆனந்தவிகடன் இதழில் வெளியான கவிதை



தோழியுடன்
உரையாடிக்கொண்டிருந்தபோது
அருகிலிருந்த
கண்ணாடிக்குவளையை
கொண்டு போய் உரிய இடத்தில்
வைத்து விடவேண்டும்
என்பதில் இருந்த
கவனத்தைவிட
அது உடைந்தபின்
அள்ளி எடுக்கும்போது
கூடுதலாயிருந்தது.



.

2 comments:

  1. அன்பின் சின்னப் பயல் - கவிதை அருமை - கவனம் தவறி உடைந்த பின் அள்ளி எடுக்கும் போது அதிக கவனம் செலுத்துவது அருமையான கற்பனை. விக்டனில் வெளி வந்தமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete