Friday, February 24, 2012

ஒரு கவிதை



ஒரு கவிதை
தன்னை எழுதிக்கொள்ள

சொற்களை எதிர்பார்த்து

காத்துக்கொண்டிருக்கிறது.

என்னிடம்.


இடையே வந்த தென்றல்

கொஞ்சம் அதன் முடியை

மயிலிறகு கொண்டு

நீவிச்சென்றது


அவ்வப்போது பெய்த

சிறு மழைத்துளிகள்

கலைந்த முடிகளை

சிறு கற்றைகளாக்கிச்சென்றது


அக்கற்றைகளிலிருந்து

வடிந்த மழைத்துளிகள்

காதோர மணிகளில்

தொக்கி நிற்க, அதில்

சூரியன் தன் முகம்

பார்த்துச்சென்றது.


இன்னும் தான்

உனக்குப்போதுமான

சொற்கள்

கிடைக்கவில்லையா

என அக்கவிதை

என்னை கேலி

செய்துகொண்டிருக்கிறது.


ஒரு புன்முறுவல்

கிடைத்தால்

இந்தக்கவிதை

முழுமை பெறும்

யாரேனும் அதனிடம்

சொல்வீர்களா..?!


 . 

6 comments:

  1. அடடா.. நமக்கு இப்படியெல்லாம் யோசிக்க வரமாட்டேங்கிறதே.. :(

    ReplyDelete
  2. @ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

    :-))))))))))))

    ReplyDelete
  3. அக்கற்றைகளிலிருந்து
    வடிந்த மழைத்துளிகள்
    காதோர மணிகளில்
    தொக்கி நிற்க, அதில்
    சூரியன் தன் முகம்
    பார்த்துச்சென்றது.


    அருமைக்கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  4. புன்னகை கிடைத்ததைப் புரிந்துகொண்டேன் இல்லையெனில்
    கருவான இக்கவிதை இத்தனை அழகாக உருவாக
    நிச்சயம் வாய்ப்பில்லை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஹ்ம்,,,ரமணி சார்..வருகைக்கும் தொடர் கவனிப்பிற்கும் நன்றிகள்..!

    ReplyDelete