Saturday, February 12, 2011

கேள்வியும் பதிலும்!



யூத்ஃபுல் விகடனில் எனது கவிதை


நீ பதிலளிக்கிறாயா
என எதிர்பார்த்துக்
காத்திருப்பதில்லை
என் கேள்விகள் -
அவை எவ்வாறேனும்
தொக்கி நிற்பினும்
எனக்கு சம்மதமே.

நீ எதிர்க்கேள்வி
கேட்கிறாயா என்று
எதிர்பார்த்து
என் ஆமோதிப்புகளும்
அவசர மறுத்தல்களும்
இல்லை

பதிலேதுமளிக்காத
உன் மௌனத்தை
எவ்வாறாகிலும்
எனக்குப் பிடித்த வகையில்
என்னால்
மொழியாக்கம்
செய்து கொள்வதே
எனக்குப் போதுமானதாய்
இருக்கிறது

இவ்வாறாகவே
நமக்கிடையேயான
உரையாடலில் தொடர்ந்தும்
இருப்போம் -
ஏனெனில்
உண்மையற்ற
நிழலுருக்களுடன்
உரையாடுவதில் எனக்கு
ஆர்வம் இருப்பதில்லை

மேலும்
இப்போது எனக்கு
அது இல்லாமல்
முடியாதெனவும்
ஆகிவிட்டிருக்கிறது.


.

2 comments:

  1. கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

    ReplyDelete
  2. @கருன்: நன்றி....நான் ரசித்த உங்கள் கவிதை இது...!

    //தொட்டிக்குள்
    வாழ்ந்தாலும்
    நீந்துகிறது
    மீன்...!////

    நல்ல ஹைக்கூ...! வாழ்த்துகள்..!

    ReplyDelete