Saturday, August 7, 2010

இது கவிதையா ?!

கவிதையே எழுத வராது
என நினைத்து இதுவரை
எழுதாமலேயே இருந்தேன்
பின் ஏதோ ஒரு வேகத்தில்
ஏற்கனவே எழுதி
வைத்திருந்த
உரை நடையை மடக்கி


க்
கி... ஒன்றன் பின் ஒன்றாகப்
பல வரிகளாக்கினேன்
இவ்வாறு எழுதி முடித்ததை
பூரிப்போடு மீண்டும்
ஒருமுறை முழுக்க
வாசித்துப் பார்த்தேன்
முதலில் நினைத்தது தான்
சரியெனத் தோன்றியது..!

.

8 comments:

  1. அதுசரி எல்லோரும் ஒரு முடிவோடதான் கிளம்பி இருக்கீங்க போல !

    ReplyDelete
  2. இது கவிதையா என்றால்...

    இது தான் கவிதை எனச் சொல்ல..

    எனக்கு கவிதை பற்றியும் தெரியாது..

    நான் கவிஞனும் இல்லை..

    தமிழ் தமிழ் அறிஞனும் இல்லை..

    ஆனால் தமிழன்.. உண்மையை

    சொன்னால் உங்கள் கவிதை..

    மிகவும் அருமை..

    ReplyDelete
  3. சங்கர்,
    கொஞ்சம் உண்மையையும் எழுதலாம்னு நெனச்சு மடக்கிப்போட்டது தான் இது.
    வேற ஒண்ணுமில்ல...:-)

    வெறும்பய,
    என்னக்கேட்டா உங்க கவித தான் நல்லாருக்கு.
    தொடர்ந்து முயற்சி பண்ணுங்க..:-)

    ReplyDelete
  4. மிக்க நன்றி எல்.கே.

    ReplyDelete
  5. கவிதை super!!!!!!!!!!

    ReplyDelete
  6. நன்றி பொன்ராஜ், வருகைக்கும் கருத்துக்கும்..!

    ReplyDelete