Sunday, May 23, 2010

வைரமுத்து'வின் ராவணன் பாடல் வரிகள்..!

வைரமுத்து'வின் ராவணன் பாடல் வரிகள்..!


கோடு போட்டா.. கொன்னு போடு..

வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..

வில்லப் போல வளஞ்ச கூட்டம்

வேலப் போல நிமிர்ந்து விட்டோம்
சோத்துல பங்கு கேட்டா அட எலயப்போடு எலய
சொத்துல பங்கு கேட்டா, அவன் தலய போடு தலய
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்தான் கேக்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது

பாம்பக் கூடப் பழகி பசும் பால ஊத்தும் சாதி

தப்பு தண்டா செஞ்சா, அட அப்ப தெரியும் சேதி
கள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்லாப்பெத்த வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஊத்த சோத்து வீரமடா

கோடு போட்டா.. கொன்னு போடு..

வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..


எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்

எங்க தண்ணி எரி சாராயம் போல் ஒரைக்கும்
வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி
எட்டுக்காணி போன அட எவனும் எழ இல்ல
மானம் மட்டும் போனா நீ மைக்கா நாளே எழ
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்

சீயான் காட்டத் தோண்டிப் பாத்தா

செம்மண் ஊத்து ரத்தம்தான்
கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..

நேத்துவரைக்கும் உங்க சட்டம்

நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்....!

2 comments:

  1. ஏ போடு.... இன்னைக்கிருந்து எங்க சட்டம்!

    ReplyDelete
  2. /*
    பாம்பக் கூடப் பழகி பசும் பால ஊத்தும் சாதி
    தப்பு தண்டா செஞ்சா, அட அப்ப தெரியும் சேதி
    */

    கேக்க கேக்க இந்த பாட்டு ரொம்ப புடிச்சிடுச்சி :)

    ReplyDelete