Tuesday, May 25, 2010

மெய் பதினெட்டு

மெய் பதினெட்டு

மரமில்லா பூமி வேண்டும்

அமில மழை வேண்டும்
கோட்டானின் சங்கீதம் வேண்டும்
நித்தம் பூமியில் சண்டை வேண்டும்
மண்ணும் விண்ணும் சிவக்க வேண்டும்
ஒவ்வொருவனுக்கும் ஒரு மதம் வேண்டும்
மனித நேயம் ஒழிய வேண்டும்
அணு ஆயுதம் பரவல் வேண்டும்
தேசியப்பறவை வல்லூறென வேண்டும்
ரத்தமே ஆறென வேண்டும்
என்றும் ஆறாக் காயம் வேண்டும்
பருவம் அற்ற பாலை வேண்டும்
இல்லான் வகுத்ததே வாய்க்காலென வேண்டும்
மனிதன் மீண்டும் குரங்காக வேண்டும்
ஆப்பிள் மரத்திலிருந்து நியூட்டன் விழ வேண்டும்

3 comments:

  1. கண்ணன் மற்றும் பத்மா..வருகைக்கு நன்றி,.
    "ஏன் இப்படி,ஐயோ ஏங்க..."
    அது மெய்(மே) பதினெட்டு , அதனால

    ReplyDelete