Saturday, January 30, 2021

நீரினும் ஆரளவின்றே

 


நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

- குறுந்தொகை
 
இந்தக் குறுந்தொகைப் பாடல் யாரெழுதிய தென்று தெரியவில்லை. ’நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே’ என்று தொடங்குகிறது. எத்தனை ஆழம், எவ்வளவு பெரிது என் நட்பு, காதல்? என்றெல்லாம் சொல்கிறாள் தலைவி. இதே போல கெல்வின் ஹாரிஸ் எழுதி இசைத்த ஒரு ஆங்கிலப்பாடலும் இருக்கிறது. ‘How deep is your love? Is it like the ocean?’ கெல்வின் ஹாரிஸுக்கு குறுந்தொகையும் தெரிகிறதா?! 🙂 இருப்பினும் கெல்வின் பாடலில் இந்த வரி உசிதம் ! “Is it like Nirvana?” நிர்வாணமடைதலைப் போன்ற ஆழமானதா என்ற இந்த வரி நிறைய யோசிக்க வைக்கிறது. இவ்வளவெல்லாம் காதலிக்க முடியுமாங்ணா ?! 🙂

No comments:

Post a Comment