Saturday, August 15, 2020

பாடும் போது நான் தென்றல் காற்று

 

தமிழ் மற்றும் இன்னபிற மொழியில் பாடும் கலைஞர்களுக்கு இந்திய துணைக் கண்டத்தில் வெளிநாட்டு பாடற்கலைஞர்களைப் போல ஸ்டேஜ் ஷோக்களில் வயர்லெஸ் மைக் வைத்துக்கொண்டு ரசிகர்களிருக்குமிடம் வரை வந்து அவர்களோடு கலந்து பாடும் வாய்ப்போ, அவர்களோடு சேர்ந்து ஆடும் வாய்ப்போ கிடைப்பதில்லை. எத்தனை பாடல்கள் பாடியிருந்தபோதும், ஆர்ப்பாட்டமான பாடல்களும் கூட. கொஞ்சம் கட்டுப்பட்டித்தனம் அவர்கள் மனத்திலேயே ஊறிக்கிடக்கிறது போலு.ம். தனிப்பாடற்திரட்டுகள் (ஆல்பம்) கலாச்சாரம் இன்னமும் தமிழ் மண்ணில் ஊறாதது தான் காரணம். இந்த ஒல்லிப்பிச்சான் அநிருத் அப்பப்ப பாட்றான்.

அந்த இடங்களை வெறுமனே வாயசைக்கும் நடிகர்கள் எடுத்துக்கொண்டு விட்டனர். பாடும் அனைவரும் இதுவரைக்கும் பின்னணிப்பாடகர்கள் என்றே அழைக்கப்படுவது ஒரு சாபம். வெளிநாட்டில் பாடுபவரே ஆடி மகிழ்விப்பது போல இங்கும் இருப்பவர் கொஞ்சமே. அதுவும் இப்போது மட்டுமே கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து தான். அப்பாச்சி இண்டியன், ப்ளேஸ், உஷா உதுப் போன்ற மேற்கத்திய பாணியில் பாடும் கலைஞர்களுக்கு மட்டுமே ஸ்டேஜ் ஷோக்களில் முன் வந்து பாடும் வாய்ப்புகள் கிட்டியது. அதிலும் மாம்பலம் மாமி உஷா உதுப் தமிழ்ச்சேலை கட்டிக் கொண்டே பாடி அசத்துவார். ராசைய்யா எப்போதும் தமது ஆர்மோனியப்பெட்டியை ஒரு ப்ராப்பர்ட்டி போல வைத்துக் கொண்டு ‘இதை; விட்டு அகல மாட்டேன் என்று சிறுகுழந்தை போல அடம் பிடிப்பார். நின்ற இடத்திலேயே பாடிவிட்டு சென்றுவிடுவர் அனைவரும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியமும் அதே போல ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ ’இளமை இதோ இதோ’ ன்னு ஒரு ராக் ஸிங்கர் போல ராம்ப்பில் பாடிக்கொண்டே நடந்து வந்தால் எப்ப்டி இருக்கும்? உடல் பருமனைப்பற்றி யோசிக்க வேண்டாம், அதே போலுள்ளவர் எல்லாம் பாடத்தான் செய்கின்றனர். மீண்டு வருவார் பாடுவார். #பாடும்போதுநான்தென்றல்காற்று.

No comments:

Post a Comment