Thursday, December 19, 2019

யாதும்ஊரே யாவரும்கேளிர்

மனித இனமே மேய்ச்சல் நிலங்கள் தேடி புலம் பெயர்ந்தது தான் வரலாறு. ஆற்றுப்படுகை நாகரீகங்களெல்லாம் அதைத்தான் சொல்கின்றன. ஒவ்வொருவரின் டிஎன்ஏ’வைப்பரிசோதித்துப் பார்த்தால் யாரும் தாம் வாழும் தற்கால நிலத்துக்குச் சொந்தமானவர் என நிரூபிக்க வாய்ப்புகள் குறைவு. இதில் நாடென்ன மதமென்ன ? குறுகிய மனங்களின் விகாரங்கள் தான் இவை. குழு மனப்பான்மையை விட்டு பல்கிப் பெருகி சமுதாயமாக வாழ முற்பட்ட மனித இனத்தை மீண்டும் கூண்டில் அடைக்க நினைக்கும் சிறுபிள்ளைத்தனம். சுற்றியிருக்கும் நாடுகளும் இதே பாணியைப் பின்பற்றி பெரும்பான்மை சமூகத்திற்கெனவே பேசுவது ,அதையே உறுதிப்படுத்துவது என்பன எல்லாம் கற்காலத்துக்கு மட்டுமே இட்டுச்செல்லும். #யாதும்ஊரேயாவரும்கேளிர்

No comments:

Post a Comment