Friday, September 14, 2018

மீண்டும் 'மழைக்குருவி'

யப்பா சாமீகளா , அந்த மழைக்குருவி பாட்டுல என்னதாம்ல இருக்கு ? ஆளாளுக்கு வரிஞ்சி கட்டிக்கிட்டு எழுதறீங்களே..? வரிகள் படு சுமார், இசை அப்பட்டமான உருவல், இழுத்து எடுத்தது, இதெல்லாம் தெரிஞ்சுமா பத்தி பத்தியா எழுதித்தள்றீங்க? ஒண்ணும் புரியலை. இல்ல என் காது தான் மக்கர் பண்ணுதா,எழவு இசை ரசனையே இல்லாமப் போயிருச்சா? ரவ்வும் பகலுமா உக்காந்து ப்ராஹ்ம்ஸ், ரஹ்மானினோவ், மொஸார்ட், மற்றும் இன்னபிற தெரிந்த இசைக்கலைஞர்களின் இசைக்கோவைகளை மனனம் செய்து அவர்களின் இசைக்குறிப்புகளை எனது கிட்டாரில் எடுக்க எத்தனை சிரமப்பட்டது எல்லாம் வீணா ? 

இசைச்செல்வங்களே.செப்புங்கள் …ஹ்ம்… ! நெஞ்சத் தொட்டு சொல்லுங்க இசைவெறியர்களே. இதே பாடலை ஒரு அறிமுகப் பாடலாசிரியர் எழுதி அதற்கு தரன்குமார், இல்லை ஒரு லீயான் ஜேம்ஸ், ஷான் ரோல்டான் போன்ற திரைக்கும் வந்தும் புகழே கிடைக்காதவர்கள் இசைத்திருந்தால் இத்தனை எழுதுவீரா ?. ஐயா எனக்கொண்ணும் ரஹ்மான் மீது காண்டு இல்லை. கிஞ்சித்தும் யோசிக்காது மேம்போக்காக இசைத்து,அப்படி சொல்வதே தவறு, வாசித்துவிட்டு சென்ற ஒரு பாடலை எப்படிய்ய்யா இப்ப்டீல்லாம் வரிஞ்சி கட்டிக்கிட்டு எழுத முடியுது ?! 

விமர்சனம் எழுதுபவர்களெல்லாம் தமக்குப்பேர் கிடைக்கவேணும் என்பதற்காகவே எழுதுகின்றனர் என சுஜாதா சொல்லியிருக்கார். இதையெல்லாம் பாக்கும்போது அது தான் சரி என்று தோணுகிறது எனக்கு. #மழைக்குருவி

.

2 comments:

  1. உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்

    ReplyDelete
  2. இல்ல என் காது தான் மக்கர் பண்ணுதா,எழவு இசை ரசனையே இல்லாமப் போயிருச்சா?

    That's a possibility...

    ReplyDelete