Tuesday, September 11, 2018

நீராளீ - ஆக்டபஸ்



நேத்து ஒரு மலையாளப்படம் பார்த்தேன். நீராளி ஹிஹி.. லாலேட்டன் சினிமயல்லே அது கொண்டு. லாலேட்டன் பீஜேப்பீல சேரப் போறாராமேன்னு ரொம்ப விசனப்பட்டுக்கொண்டார் போகன். ஏற்கனவே லால்சலாம்னு ஒரு படத்துல நடிச்சவர் தான் லாலேட்டன். சரி அதேல்லாம் எதுக்கு நமக்கு படத்தப்பாப்பம்னு ஒக்காந்தென், ஒரு பழைய டெம்ப்போவ எடுத்துக்கிட்டு அவரும் அவர் நண்பரும் பெங்களூரிலருந்து கேரளாவுக்கு போகின்றனர். வழியில் ஒரு அபகடம் அதாண்ணே ஆக்ஸிடென்டு.! வண்டி தொங்குது பாறைமேல. கீழ அதலபாதாளம். விழுந்தா ஒரு எலும்பு கூட மிஞ்சாது. 

இங்கருந்து தான் ப்ளாஷ்பேக் ஆரம்புடிக்கிது. வண்டிக்குள்ள மாட்டிக்கிட்டவொடனே கதையும் குடுங்கிப்போகுது. அவரால ஒண்ணும் செய்ய முடியலை. பக்கத்துல இருக்கிற மரத்துல ஒரு மந்தி அந்த அர்த்தராத்திரியிலயும் ஒக்காந்து லாலேட்டன் எந்தா செய்யுன்னுன்னு நோக்குன்னு. ட்ரைவர் ஃப்ரெண்டு மயங்கிக்கிடக்கார். அவர் தம்மட மகளுக்கு வாங்கிச்ச கேக்கை எடுத்து தூக்கிப்போட்டு ஆச காட்றார். இருன்னாலும் பக்கத்துல வரமாட்டார் அந்த மந்தி!. கொண்டு வந்த வைரங்களை எடுத்து தூக்கிப்போட்றார் , உயிரை விட இதெல்லாம் வெறும் துச்சமாணுன்னு மந்திக்கி சொல்றாரா இல்ல நமக்குதான் சொல்றாரான்னு புரியலை. இதுக்கிடையில நாசர் திடீர்னு வண்டி பேனட்ட் மேல வந்து குந்திக்கினு ‘ஞான் கரையின்ன ஆளில்லா நோக்கியோ, இதக்க அங்ஙன ஊதிக்களையாம்’னு கூவறார். இந்த பெர்ஃபார்மன்ஸ பண்றதுக்கு நாசர் தேவையா?! ஹ்ம்,…

வண்டிக்குள்ள குடுங்கிய சமயத்தில ஒரு எதிர்பார்ப்பும் இல்லை ஆடியன்ஸுக்கு. இவர் லாலேட்டனில்லே எங்கனயாகிலும் தப்பிக்கும் என்ற மனநிலைதான் எனக்கும். அதான் ஒரு பிரச்னை. இருக்கிற செல்ஃபோனுக்கு சார்ஞ் போட வழியில்லை. அதில பேலன்ஸும் இல்லை. கோள்ஸ் (calls) வந்தில்லங்கில் இங்க இருக்கிற பிரச்னைய வெளில சொல்ல வழியில்லை. Daylightன்னு ஒரு சில்வஸ்டர் படம் அது பாக்கணும். கிட்டத்தட்ட இதுமாதிரி நிலை தான். ஆனாலும் அவரோட ஒரு பத்து பேர் உள்ள கிடப்பார்கள். ஒவ்வொரு நிமிடமும் சில்லிட்டு சீட்டு நுனிக்கு கொண்டு போகும். இங்க லாலேட்டன் எந்து வேணங்கிலும் செய்து இவடருன்னு தப்பிக்கும்னு நமக்கு நம்பிக்கை இருக்கிறதால.. ஹிஹி.. செம போர் சேட்டா!

நதியாதான் பொண்சாதியாம் அவர் ஒரு பிரசவ வார்டுல அட்மிட் ஆயிட்டுண்டு. அவர் எப்பழும் லாலேட்டனுக்கு ஃபோன் கோள் செய்து டைம்பாஸ் செய்றார். அடிக்கடி கால் கட் செய்துவிடுகிறார். கட்டெய்யறது கட்டெய்யறதுன்னு கெஞ்சறார் லாலு. இருந்தாலும் மசியாது அந்த நதியா மொய்து…ஹிஹி :)
 
இதுக்கிடையில ஒரு ஒன்ஸ்ஸைடு காமம். யப்போ காமமெண்டால் மலயாளத்துல லவ்வுன்னு அர்த்தமாக்கும். அவள் லாலேட்டன் மேல காண்டாகி இப்ப லாலேட்டன் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையை போலிஸுக்கோ இல்ல தீஅணைப்பவருக்கோ பறையாது அடம் பிடிக்கின்னு. என்னதான் செய்வார் லாலேட்டன் இந்த அறுபது வயசிலை இதெல்லாம் தேவையா ?!...ஹிஹி… 

ஒரே ஒரு சம்சயம் எனிக்கு. இந்த எழவு படத்துக்கு எதுக்கு நிராளீன்னு பேர் வெச்சது ?...ஹ்ம்… நீராளின்னா மலயாளத்துல ‘ஆக்டபஸ்’ எண்டு அர்த்தம், #நீராளீஈஈ


.

No comments:

Post a Comment