Friday, August 10, 2018

”சமானுலேவரூ ப்ரபோ”







நித்யஸ்ரீ கிறித்துவப்பாடல்களை கர்நாட்டிக்கல பாடீட்டாராம். எல்லாரும் கூச்சல் போட்றாள். பி,சசிரேகா பிறப்பால் ஒரு இந்து, அவர் பாடாத கிறித்துவப்பாடல்களா? இல்லை எல் ஆர் ஈஸ்வரி, ஒரு கிறித்தவர் அவர் பாடிய பாடல்களுடன் தான் ஆடி மாத கூழே ஊற்றுவர் என் ஊரில் ஏன் எல்லா ஊரிலும்! இசைக்கு ஏதய்யா மதம்? இசையே மதம் தான். ராசைய்யா’வின் ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’ பாடல் ஒன்று போதும்.

ரெவெரெண்ட் ஜெகத் கஸ்பரோட ஆசியில் தான் ராசைய்யாவின் திருவாசகமே வந்தது !

 டீஎம் கிருஷ்ணா அவர் பங்குக்கு கர்நாட்டிக்கை குப்பத்துக்கு கொண்டு போனார். இந்த மதச்சம்பந்தமான குழப்பங்களெல்லாம் மேற்கத்திய இசைக்கு ஒரு நாளும் இல்லை. அவாள்லாம் இசையை இறைவனோடு சேர்த்து வெச்சு ஒருபோதும் கொழப்பிக்கிறதெல்லாம் இல்லை.! தியாகைய்யர் ராமன் மேலே பாடீட்டார் அதுக்காக அத்தனை கீர்த்தனைகளும் ஒரு மதத்துக்கான பாடல் மட்டும் என்றாகிவிடுமா ?! 


எத்தனையோ இழை பிரித்தெடுத்தார் ராசைய்யா தியாகைய்யரின் கீர்த்தனைகளிலிருந்து மேற்கத்திய செவ்வியல் இசையை. ஒன்றுக்கொன்று அடிப்படைத் தொடர்புடையது தான் இசையும். இசையில் ஏது பாகுபாடு ?! எனக்கெல்லாம் முதன்முதலாக கிட்டார் கற்றுக்கொள்ள செல்லும்போது ஆர்ச்சி ஹட்டன் மாஷே பள்ளிப்பாட்டுகள் (மலயாள சர்ச் கீதங்கள்) தான் சொல்லிக் கொடுப்பார். அதையெல்லாம் வாசித்து தான் இசை கற்றுக்கொண்டேன். இப்போதும் எனது சன்னி மாஷே சில பாடல்களில் நுணுக்கமானவற்றை பள்ளிப்பாடல் களினூடேயே சொல்லிக்கொடுப்பார். Hymns உண்டு தான் இங்கிலீஷிலும் அதுக்காக அது குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமானது என்றெல்லாம் அர்த்தமில்லை.

இப்படி மதம் பிரித்து இசை கேட்பவரெல்லாம் ரசிகா’வே இல்லை என்பேன் நான். காஞ்சிப்பெரியவர் (மூத்தவர்) ஒரு முறை சொல்லிக் கேட்டிருக்கிறேன்,கிறைஸ்ட் தான் கிருஷ்ணா, ஜீஸஸ் தான் சிவா என்று.நீங்களே சொல்லிப் பாருங்கள். சொற்கள் ஒன்றுபோல் ஒலிக்கும். #கூச்சல்




No comments:

Post a Comment