Monday, June 25, 2012

யார் தொழுவர்?



உலக அழிவினால் இல்லாது போகும்
மனித இனத்தைப்பற்றி அல்ல கவலை இப்போது
இதுகாறும் அவர்களால் கொண்டாடப்பட்ட
கடவுள்களைப் பற்றியே.

தமக்கு கீழ்ப்படிதலுள்ளவர்களை நமக்கு எப்போதும்
பிடித்துத்தான் போகும்
நாம் உருவாக்கிய
கடவுள்களும் அதற்கு விதிவிலக்கில்லை
என்னைக்கேட்டால் அவர்
தற்கொலை செய்துகொள்வார்
என்றே கூறுவேன்.

தமக்கென யாருமற்ற உலகில்
தான் மட்டும் தனித்திருந்து
என்ன செய்துவிடக்கூடும் என்று.


.

4 comments:

  1. சோமா

    கடவுளில் யாரெல்லாம் காதலியோ மனைவியோ வைத்திருக்கிறார்களோ அவர்கள் ஓரளவாது வாழ்க்கையை ஓட்டிவிடுவார்கள்...இந்த பேஸ்லர்ஸ் கடவுள்கள்தான் பாவம்...நாதா என்று சொல்வதற்கு ஆள் கிடைக்காது....:-)

    ReplyDelete
  2. விதிவிலக்கற்ற கடவுள்கள்களாய் மனிதர்களே தெரிகிறார்கள்.

    ReplyDelete