யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த என் ஆறு கவிதைகள்
நன்றி
யூத்ஃபுல் விகடன்
http://youthful.vikatan.com/youth/Nyouth/chinnapayalpoem250810.asp
நன்றி
யூத்ஃபுல் விகடன்
http://youthful.vikatan.com/youth/Nyouth/chinnapayalpoem250810.asp
பிடித்தம்
பிடித்தம் போககைக்கு என்ன வரும்?
பிடித்தம் போனால்
கைக்கு எதுவும் வராது.
அவள் கேட்டது என்
சம்பளத்தை
நான் சொன்னது
என் காதலை
*
வலைமனை
என்னோடு வா என் வலைப்பூ
வரைக்கும்
என் இடுகையைப் பார்
என்னைப் பிடிக்கும்..!
*
தப்பு... சரி!
நான் செய்த தப்புகளைமட்டும் பார்க்காதே
எத்தனையோ 'சரி'
செய்திருக்கிறேன்
பார் என்றேன்
எல்லாமே தப்பு
தான் என்றாள்
அப்ப சரி' என்றேன்.
*
நினைவுகள்
பறக்கும் பறவைகளை எண்ண முயற்சித்ததில்
கழிந்தது மாலை...
பல தடவைகள்
மீளப் பறந்து வரும்
பறவைகளை மீண்டும்
மீண்டும் எண்ண
கடந்து சென்றவையே
திரும்ப வந்தது
போலிருந்தது.
எண்ணி மாளவில்லை
என் நினைவுகளையும்
பறவைகளையும்.
*
பிடிக்கவில்லை
பிடித்தவை எல்லாம்பிடிக்காமல் போகிறது
கொஞ்ச நாளில்
பிடிக்காதவையும்
பிடிக்கும் வரை.
*
காற்று
காற்றாடியிலிருந்துகாற்று வரவில்லையே
என்ற கவலை எனக்கு.
*
.