Saturday, October 30, 2010

ஏதோ இழந்தது போல

கீற்று இணைய இதழில் வெளியான எனது கவிதைகள்

ஏதோ இழந்தது போல

 காகிதங்கள் அதில்
கொஞ்சம் எழுத்துகள்
ராமபாணங்கள்
இன்ன பிற ஆட்கள்
ஆங்காங்கே
‘அமைதி காக்கவும்’
பலகைகள்
கதிரைகளின் கிறீச் சத்தம்
அவ்வப்போது பதியும்
சப்பாத்துகளின் ஒலி
எப்போதாவது சத்தம்
எழுப்பும் மின்விசிறி
இவையாவும் இல்லை
இணைய நூலகத்தில்.



ஸீசர் பிறந்தான்(?)


நல்ல நேரம் பார்த்து
நட்சத்திரம் அறிந்து
ராகுகாலம் நீக்கி
எமகண்டம் தவிர்த்து
அஷ்டமி,நவமி போக்கி
அமாவாசை விலக்கி
பிறந்தான்(?) ஸீசர்.


.

2 comments: