Friday, March 8, 2024

Why don’t you just meet me in the middle?

                                Zedd, Maren Morris, Grey - The Middle (Official Music Video) - YouTube

Why don’t you just meet me in the middle? - இந்தப்பாட்டு கொஞ்சம் பழைய பாடல் தான். 2018ல் வந்தது. என்ன பிரசித்தம்னா இதுல பத்து வரிதான் அதே தான் திரும்பத்திரும்பப்பாடுவார். பாடகி மாரன் மோரிஸ். பல்லவியில் Why don’t you just meet me in the middle? Im loosing my mind just a little. இதே இரண்டு வரிகளை பலவிதமாகப் பாடுவார். அதான் சிறப்பு. கிட்டத்தட்ட ஒரு ஐந்து ஆறு வகையாகப் பாடுவார். அள்ளிக் கொண்டு போகும் கேட்கும் போது.
கொஞ்சம் ராப்/கொஞ்சம் ராக் (ஆமா ) கொஞ்சம் விக்கி தேடினப்போ இந்தப்பாட்ட மாஸ்ட்டர்களில் கமீல கபெலோ (ஆஹா நம்ம செனோரீட்டா.. 🙂 ) பாட முயற்சித்திருக்கிறார் , பின்னர் ஆன் மேரி (ஃப்ரெண்ட்ஸ் புகழ்) இப்படி பல பேர பதம் பார்த்து பின்னர் கடைசியாக மாரன் மேரிஸ் பாடியது ஃபைனல் அவுட்புட்டாக வெளிவந்திருக்கிறது.

02:17 ல் ஒரு வகை குழைவு ,,யப்பா கேளுப்பா செய்ய மாட்டியா என்று கெஞ்சும் வகை. அதிலயே 02:23ல் ஒலிக்கும் அந்த தெனாவட்டு, அந்த யோடலிங் (yodelling) உருட்டல் எல்லாம் சான்ஸே இல்லை -
02:26-ல் வேறு வகை.குழைவாக ஆரம்பித்து வேகமெடுத்து உச்சத்தில் போய் நிற்கும். ஆஹா அனுபவிக்கிறாள்டா.
02:36-ல் இன்னொரு வகையாக. இவ்வளவு நேரம் கேட்கிறேனே இன்னுமா உனக்கு நான் சொல்றது புரியலைன்னு கத்த ஆரம்பித்துவிடுவார்.. ஹிஹி...
02:51 -ல் வாய்ப்பாடு சொல்லிக்கொடுப்பது போல சிறுபிள்ளைகளுக்கு, இப்ப கேப்பியா மாட்டியான்னு ..ஹிஹி.
03:01-ல் சொல்றதெல்லாம் சொல்லியாச்சு இனி உன் பாடு என்று திரும்பத்திரும்ப அதையே பாடிக் கொண்டிருப்பார். ஆஹா. இந்தப்பாடலை தமிழில் பாடத்தகுதியானவர் யாருன்னு கேட்டா ..ஆண்ட்ரியாதான் (ஹிஹி அதான அங்க தான வருவ நீ..ஹிஹி )

தமிழ்ல இது போல யாரும் செய்திருக்காங்களா என்னன்னு பார்த்தா, ராசைய்யா ‘பத்ரகாளி’ படத்துலயே இதே டெக்னிக்கை செய்திருக்கிறார். ’கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை’ பாடலில் சரணத்தில் இதை பரீட்சார்த்தமாக செய்து பார்த்திருப்பார். 01:27ல் ஜேஸுதாஸ் பாடும் ‘உன் மடியில் நானுறங்க’கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ’ ன்னு ஆரம்பித்துப் பாடுவதை சுசீலாம்மா 01:41ல் வேறு விதமாகப்பாடுவார். ஜேஸுதாஸ் கெஞ்சலாகப் பாடியதை சுசீலாம்மா கொஞ்சம் உச்சஸ்தாயியில் எடுத்து அதே வரிகளை ராகம் மாற்றாமல் வேறு கட்டையில் பாடுவார். அந்த ஒரு வரி மட்டுந்தான் பிறகு பாடல் அதன் போக்கில் சென்றுவிடும்.

பிறகு இரண்டாம் சரணத்தில் சுசீலாம்மா ‘மஞ்சள் கொண்டு நீராடி மொய்குழலில் பூச்சூடி வஞ்சி மகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி’ என்று இருவருமாகப்பாடி பின்னர் சுசீலாம்மா வேறுவகையாக பாடிக்கொண்டு செல்வார் பின்னர் அதே சுதியில்/கட்டையில் ஜேஸுதாஸும் இணைந்து பாடுவார். இதுல என்ன ப்யூட்டீன்னா தாளம் எப்பவுமே மாறாது ஒரே பாணியில் ஒலிக்கும். இரண்டு சரணங்களிலுமே. அங்க தான் வெப்பார் ட்விஸ்ட்டூ ராசைய்யா! தாளம் மாறாது வேறு கட்டையில் பாடவைத்திருப்பார் ஐயா!

இன்னொரு பாடல் கூட இருக்கு, நாடோடிப் பாட்டுக்காரன் -ல ”வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ: என ஒரு பாடல் அதுவும் சுசீலாம்மா பாடினது தான். கிட்டத்தட்ட முழுப்பாடலுமே கர்நாடக சங்கீத ராகத்தில் (லதாங்கி மற்றும் மத்யமாவதி ) ஆடலுக்கென இட்ட பாடல் போல ஒலிக்கும். கடைசியில் பாலு வந்து வேறு பாணியில் பாடுவார். நாட்டார் பாணியில் ஆனால் தாளம் முழுக்க மாறியே போய்விடும் ராகமும் தான்...எனினும் அதே வரிகள் தான்.

சரி ராசைய்யாவைச்சொல்லியாச்சு. ரஹ்மான் ஏதும் பண்ணலியான்னா செய்திருக்கார் அவரும். விண்ணைத் தாண்டி வருவாயா-ல வரும் ‘மன்னிப்பாயா’ பாடலில்.

0:43-ல் ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் உனைநான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா ?
01:08-ல் அதே வரிகள் தான். வேறுவகை. தாளம் மாறாது. கட்டை மாறி ஒலிக்கும் வரிகள். அலுக்காது கேட்க வைக்கும்.

இதுல என்ன ப்யூட்டின்னா ‘ இந்த ஒரு சொல் மன்னிப்பாயா’வை பல வகைகளாக சொல்லவைத்துப் பாடவைத்து காதலனை கெஞ்சிக்கேட்கும் குரலாக ஒலிக்க வைத்து தாளம் தப்பாது , எத்தன தடவை நான் கேட்கிறேன் பாரு மகனேன்னு கெஞ்சி கொஞ்சிப் பாடுவார்

0:57லேயே மூன்று முறை கேட்டுவிடுவார் மன்னிப்பாயா என பின்னரும் 01:18 ல்தொடங்கி 01:30 வரை கிட்டத்தட்ட ஐந்து வகைகளாக மன்னிப்பாயா எனக்கேட்பார் மன்றாடுவார் ஷ்ரேயா கோஷல். பின்னர் ரஹ்மான் வந்து பாடுவார்னு வெச்சுக்கங்களேன். அப்ப மொத்தமாப் பாத்தா ஒரு எட்டு தடவை மன்னிப்பாயான்னு கேட்டு காதலனை ‘இந்த அளவுக்கேல்லாம் நான் வொர்த்தா’ (அடங்*& ..சரி வேணாம் விட்ருவோம். ஹிஹி...) என சந்தேகப்படும் அளவுக்கு கெஞ்சிக்கேட்பார். ஹிஹி.

தம்பி அநிருத் இதுவரை இதுபோல ஏதும் செய்திட்டில்லை. எனக்குத் தெரிந்தவரை. இதெல்லாம் கொஞ்சம் பழைய சரக்குகள். அதான் டச் பண்ணலைன்னு நினைக்கிறேன்.

அதனால சொல்ல வர்றது என்னன்னா ‘Why don’t just meet me in the middle’ தான்..ஹிஹி.. என்ஜாய் என்ஜாமி. #Middle

Why don’t you just meet me in the middle
கண்ணன் ஒரு கைக்குழந்தை
மன்னிப்பாயா
வனமெல்லாம் சென்பகப்பூ

No comments:

Post a Comment