Thursday, April 25, 2013

புகைப்படம்



என் கல்லூரி நாட்களின்
புகைப்படங்களை வைத்து
ஒவ்வொன்றாகப்
பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.


‘அம்மா இது யாரும்மா ?’

‘இது, அப்ப இது ?’

ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டே
வந்தேன் நான்


‘அம்மா இது யாரும்மா’
என்ற கேள்வி அங்கேயே
தொக்கி நின்றது


‘என்னம்மா மறந்துபோச்சா’
என்ற கேள்விக்கு
‘அது மட்டும் மறக்கவேயில்லை’
என்று கூற
ஏனோ எனக்குத் தோணவில்லை


 .

5 comments:

  1. Ramkumar S

    பெண் இன்னும் அடிமைதான். அவளுக்கென்று எந்த கருத்துச் சுதந்திரமும் இல்லை. தன் எதிர் காலத்தைத் தானே முடிவெடுக்கும் சுதந்திரம் அவளுக்கு இல்லை. உஙகள் குழந்தைகளுக்காவது அந்த சுதந்திரத்தை உறுதிப் படுத்துங்கள். நாளை அவளாவது மறக்காமல் மறந்து போகாமலிருக்கட்டும்.

    ReplyDelete
  2. சிறப்பான கருத்திற்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ம்.. அழகு...

    பெண் சுதந்திரம் எக்காலத்திலும் கேள்விக்குறிதான்...

    ReplyDelete
  4. நன்றி கவிதை வீதி சௌந்தர் ;)

    ReplyDelete