Saturday, October 16, 2010

பகல் நிலவு


யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த என் கவிதைகள்..

நன்றி
யூத்ஃபுல் விகடன்
http://youthful.vikatan.com/youth/Nyouth/chinnapayalpoem111010.asp

பகல் நிலவு
என்னுடன் நீ இருக்கும்
பொழுதுகள்
பகலவனைக் கண்ட
பனியென விரைவில்
கரைந்து போகின்றன
ஆனால்,
உனை நான்
நிலவென்று தான்
இத்தனை நாளும்
நினைத்திருந்தேன்..!
*
அழகு
உன் அழகை
எவ்வளவு தான்
நான்
எழுதினாலும்
என் எழுத்துகளை விட
நீ தான்
அழகாய்
இருக்கிறாய்.!
*
நீ அல்ல..!
என்னுள்ளும்
எத்தனையோ
கவிதைகள்
இருக்கின்றன
அவை அனைத்தும்
என் மொழியும்,
அது பல
நூற்றாண்டுகளாக
போற்றிப்பாதுகாத்த
சொற்களும்
தந்தவை
நீ அல்ல.!


.

6 comments:

  1. அழகான கவிதைகள்... வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  2. யதார்த்த கவிதைகள் எழுதும் சிலரின் நீங்கள் ஒருவர் ... அதை இன்னும் மெருகூட்டுங்கள் .....
    அந்த மூன்றாவதுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள் ..எங்கயோ போய்டீங்க .... :))

    ReplyDelete
  3. நன்றி, சுதர்ஷன்,
    இன்னும் முயற்சிக்கிறேன்..!

    ReplyDelete
  4. Beautiful poems keep it writing soon i visit again to your blog

    ReplyDelete
  5. மிக்க நன்றி பிரதீக்ஷா..! வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..:-)

    ReplyDelete