விஜய் ஏசுதாஸ் மற்றும் யுவன்.
தெளிந்த நீரோடை. சலசலத்து செல்லும் கூழாங்கற்கள்
போல கிட்டாரின் இழைப்பு வரை வெளித்தெரிகிறது. பல்லவிக்கும் சரணத்துக்கும்
ராக வேறுபாடு இல்லை அதுதான் நீரோடை. எங்கும் மாறாது தானாக வழி
கொண்டோடும் அது. சரணங்களில் அங்கங்கு எதிரொலி கொடுத்து அழகு கூட்டியிருக்கிறார்
யுவன். விஜய் ஏசுதாஸின் குரலில் தந்தையின் குழைவு அங்கனமே தொடர்கிறது.
திசைகளை நீ மறந்துவிடு, பயணங்களை தொடர்ந்து விடு.
மிகுந்த வியர்வையில் எங்கிருந்தோ வந்த குளிர் தென்றல் வீசுவது போன்ற
இசையமைப்பு. யுவன் அவர் இடத்தில் எப்போதும் இருந்து கொண்டுதானிருக்கிறார்.
எத்தனை தான் கிழஞ்சிங்கம் வைரமுத்து எழுதியிருந்த
போதும்,
ராம் மற்றும் யுவனின் நாடித்துடிப்பு கண்டு வரிகளை அள்ளிக்கொடுக்கும்
நாமு’ இல்லாதது பெரும் குறை. தேற்றும் பாடல்
போல,எல்லாம் முடிந்தது என வீழ்ந்து கிடக்கையில், இன்னமும் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமா என கேட்பது போல அமைந்திருக்கிறது பாடல்.
”தண்ணீரில் வாழும் மீனுக்கு ஏது குளிர் காலமே”,
“சலவை செய்த பூங்காற்று”, “குழலோடு போன சிறுகாற்று
இசையாக மாறி வெளியேறும்” அத்தனையும் வைரமுத்துவின் அடித்து ஓய்ந்துபோன
துருப்பிடித்த பட்டறையின் வரிகள். ஐயா இப்படியெல்லாமா இன்னமும்
எழுதிக்கொண்டிருக்கிறீர்? அத்தனை பாடல்களிலும் உயிர் வரிகள் இல்லாது
இட்டு நிரப்பியவற்றவையே காணக்கிடைக்கிறது.
பாடலின் தொடக்கம் ஏகாந்த உணர்வைத்தர அதையே தொடர்ந்தும்
இழைத்து பாடல் முடிவு வரை அதே உணர்வில் வைத்திருக்கிறது யுவனின் இசை. பச்சைப்பசேலென எழுந்து நிற்கும் ராமின் கற்பனையும் அதில் மழை பொழியும்
யுவனின் இசையும், வைரமுத்துவின் வரிகள் மட்டுமே
காய்ந்து நிற்கிறது. இதையே நாள்பூராவும் ஓடவிட்டுக்கொண்டிருக்கலாம்
இசை மட்டுமே போதும் என உணர்வு மேலோங்குகிறது. மொழியற்ற பூமிக்கு
எதற்கு வரிகள் ?! இசை மட்டுமே போதுமே?!
’ஆஸ்டின் இல்லம்’னு ஒரு
பெருங்கதை எழுதீருந்தார் அப்ப வந்த ‘இந்தியா டுடே’யில் சுஜாதா. அது தான் இப்பத்தைய வடிவம் கடக்குட்டீ சிங்கம்!
கிட்டத்தட்ட ஒரு பெரும் கிராமத்தின் ஆட்கள் வீட்டுக்குள்.அத்தனை கதா பாத்திரங்கள், அத்தனை பெயர்கள், அவர்களின் உறவுமுறை எங்கும் பிசகாது அத்தனை உறவுமுறைகளையும் தெளிவாக உச்சரிக்கும்
அத்தனை பாத்திரங்களும். அதுல வர்ற ஒரு சின்னப்பையன் கேப்பான்
சக வயது பெண்டுகள்ட்ட ”எஃப்’ல ஆரம்பிச்சு
‘கே’ல முடியற இங்கிலீஷ் வார்த்தை நாலு சொல்லு பாப்பம்னு.அது மட்டும் தெளிவா எனக்கு ஞாபகம் இருக்குஹெவிலீ இன்ஸ்பையர்டுன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்
பாண்டிராசு.
வயலும் வாழ்வும், விவசாயின்னு பைக்ல எழுதி வெச்சுக்கிட்டு
ஊர் சுத்துவது, காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல கதா காலட்சேபம் நடத்துறது
எல்லாம் ஜிகினா வொர்க். எங்க ‘விவசாயீஈ
விவசாயீஈன்னு பாடீருவாரோன்னு ஒரு பயம். அது மாதிரி எதுவும் இல்லை :)சொல்லப்போனா கார்த்திக்கி அழவே தெரியலை.
மூஞ்சைப்பாக்கவே சகிக்கலை. அந்த ரேக்ளா ரேஸ் யுகங்கள்
கடந்தும் பயணிக்கும் ‘பென் ஹர்’. எத்தனை
ஈரோயினி, யப்பாப்பா எல்லோருக்கும் அழகிய தமிழ்ப்பெயர்கள்.
கண்ணுக்கு இனியாளா’ன்னு ஒரு இடைவெளி விட்டு மெளனிகா
கேக்கும் போது பக்குனு சிரிப்பு வருது. கண்ணுக்’கினியா’ கல்ச்சுரல்ஸ்ல கைல பறை
வைத்துக்கொண்டு அடித்து தாளமிட்டு ஆடுகிறார். எதோ சேட்டு வீட்டுப்பொண்ணுஹ நம்மூர் கிரமத்திருவிழாவ
வாயப்பிளந்து கேட்டுக் கொண்டிருப்பது போல ஒரு ஃபீலிங்கி.ஹிஹி.. கொஞ்சமும் பொருந்தவில்லை.
ரொம்ப நாளைக்கி பிறகு வந்த பாண்டிராசுக்கு ஒரு சிறு வெற்றி இதன் மூலம் கிடைக்கலாம்.
பெண்கள் மனது வைத்தால்.எப்பவும் தமிழப்பய ’செண்ட்டிமெண்டல் இடியட்’ தானே அதனால,! ஹிஹி
இந்தக் காலத்துல இம்மாம்பெரிய பெத்த ஃபேமிலீல்லாம் ஏதுங்ணா.? கண்ணாலமே பண்ணாத சும்மானாச்சுக்கும்
தத்து எடுத்துக்கிற கலாச்சாரம் தான் வளந்துகெடக்கு. என்னவோ ஒரு தெலுங்கு படம் பாக்றாமேரீயே
ஒரு ஃபீலிங்கி ஒஅடுது படம் முழுக்க. ஆஹா அதானே பாத்தேன் இதே படம் உள்ளூர் விநாயகா தேட்டர்ல
‘சின்னபாபு’ன்னு தெலுகுலோ ஒடுதூங்ணா :)
’ஏரியானா க்ராண்டி’ சின்னப்புள்ளதான
பாடுதுன்னு சரியாக்கவனிக்காம விட்டது தவறு. இந்தப்பாடல் கேளுங்க.
சம்திங் சைக்கடலிக். No Tears Left to Cry’ அற்புதமான
பாடல். இயல்பாகவே இந்த பெண்களுக்கு Yodellingக்கு பஞ்சமே இல்லை அவர்களின் குரலில். இதுல ஹைட்டாக கேக்கணும்னா
‘Body Guard’ படத்துல விட்னி ஹூஸ்டன் பாடின ‘will alwas love
you’ பாடலைக்கேளுங்கள். இவ்வளவு எனர்ஜி எங்கருந்து
வருது. இத்தனை இழுவை. தொடர்ந்தும் பாடிக்கொண்டே
இருப்பார். நம்மூர்ல ஆண்ட்ரியாவ மட்டும் சொல்லலாம். கமல் மகள் முயற்சி தான் செய்கிறார். இன்றைக்கும் ஒரு
ப்ளைன் வெஸ்ட்டர்ன் பாடிவிட இயலவில்லை. தம்பி அநிருத்தின் இசையில்
‘வேதாளமில்’ முயற்சி தான் செய்தார். கமல் படம் மன்மதன் அம்பு’வில் பாடியிருப்பார் ஒரு பாடல்
ஆண்ட்ரியா. Whos the Hero Whos the Hero !ன்னு :)
பரிமாணங்களைக்கடந்த இசை காணொலி உருவாக்கம். எல்லாரும் செய்தது தான். க்றிஸ்டஃபர் நோலன் இதுல கில்லாடி.
இன்ஸெப்ஷன்லருந்து கொஞ்சம் இன்ஸ்பிரேஷன். நம்மூர்
புலி படத்துல கூட ஸ்ரீதேவி அப்படியே தூண் மேல குறுக்கால நடப்பார். அதுல கொஞ்சம் சுட்டு இந்த இசைக் காணொலியை உருவாக்கியிருப்பர் போலும்.இந்தப்பத்தி வரிகள் வரும்பொது பாடுவதைக்கேளுங்க. ஆஹா.
அற்புதமாக எக்கோவுடன் அடிச்சு தூக்கிட்டுப்போகுது வயசுக்கு மீறின குரல்.
அளவெடுத்து தைத்தது போல பிசிறில்லாத குரல் உச்சத்திலும்,மத்தியிலும் ஒலிக்கிறது.
Right now, I'm in a state of mind
I wanna be in, like, all the time
Ain't got no tears left to cry
Oh, I just want you to come with me
We're on another mentality
Ain't got no tears left to cry (so don't cry)
பாடல் வரிகளெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் காதல் ஏக்கம் தான் மயக்கந்தான், 18 வயசுப்புள்ள
என்னாதன் பாடும் இதத்தான் பாடும் ஹீஹி… ஆரம்பத்தில ஹார்மனியோடு
தொடங்கி , எதோ சர்ச் பாட்டு, பள்ளிப்பாட்டு
மேரி ஆரம்பித்து ஆமேல எல்லாமாச்சேர்ந்து அமுக்குதுய்யா :)
'வியட்நாம் காலனி'ன்னு ஒரு படம் , பிரபு கவுண்டமணில்லாம் நடிச்சது. அதான் இப்ப காலா! அதேதான் 'அவ்தார்'னு ஒரு பிரம்மாண்ட இங்கீலீஷ் படமாவும் வந்துச்சூ. நிலமே எங்கள் உரிமைன்னு அங்க ஒரு பார்ப்பனர் போராடுவார். இங்க தாழ்ந்த இனத்தை சார்ந்த ரவுடி போராட்றார் அவ்வளவுதான் வித்தியாசம். என்னைக்கேட்டால் ரஞ்சித்துக்கு சரக்கு தீர்ந்திருச்சுன்னுதான் சொல்வேன். இனியும் தொடர்ந்து வணிக நாயகர்களுக்காக படம் பண்ணி'க்கொண்டு இருந்தால் அதோகதிதான். இப்படியாப்பட்ட பட வரிசையில் இது ரெண்டு லெட்சத்து எழுபத்தை யாந்திரத்து முன்னூத்து முப்பதாவது படம், நில அபகரிப்பு எதுத்து போராட்றது, எதிரிங்கள்லாம் உள்ளூர் போலீஸுக்கு காசு குடுத்து தன்னக்கட்டுவது இதெல்லாம் என்னய்யா புதுசு ?? கபாலிய வளைச்சி உள்ளுர் கதையாக்கிட்டா புதுசாயிருமா ?!கெரகம். சோபாசக்தி பெரு விமரிசையா எழுதீட்டார்,அரைமென்டல் வசனமெல்லாம் இல்லைன்னு. ஏன் குசினி ஜரீனா கிட்ட இடுப்பில கை வெச்சுக்கிட்டு 'முழூ ரவுடித்தனத்த' இனிமே தான் பாக்கபோறன்னு.சொல்வார். அது ஒரு தடவ சொன்னா ஒம்போது தடவ சொன்னமேரிய விட இது பஞ்சு டயலாக்குங்ணா..வேணா இரும்பு டயலக்குன்னு கூட வெச்சிக்கலாம். வேங்க மவன் ஒத்தைல நிக்கேன்லாம் அரை மென்டல் வசனத்துல சேராதாங்ணா? என்னகேட்டா இதெல்லாம் முழுமென்டல் வசனம் தான்!ஓட்டை விலீஸ் ஜீப்பை எடுத்து அப்பப்ப உதார் காட்றார் கரிகாலன்.
இதுல காலா காலத்துல கட்டைல போற வயசில எம்பெத்தெட்டு காதலிஹ வேற. ஆனாலும் ஹூமா குரைசி 'கரிகாலன்'ன்னு கூப்டறப்ப குழையத்தான்யா செய்யுது. அந்த ஓட்டல் சந்திப்புல ஹூமா,காலாவின் கையை தடவுறார் பழைய ஞாபகத்துல. ஒரு கட்டத்துக்கு மேல போகும் போது இல்ல இனிமே வேணாம்னு ரவுடி காலா சொல்ற முகபாவம், பத்து நாளா கக்கூஸே போவாம கான்ஸ்டிப்பேஷன்ல இருந்தா மேரி ஒரு எக்ஸ்ப்ரெஷ்ன். தேவையா இது ? சரி இப்டி ஒரு காதலி இருந்ததை ஏன் குலவிளக்குகிட்ட மறைக்கணும் ? என் குல சாமிய்யா செல்வி என்று மருகும் காலா 'செல்வி'யிடம் இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக் இருந்ததை மறைப்பாரா?. அப்டிக்கும் செல்வி இவரை மட்டுமே கடவுள்னு நினைச்சு வாழ்ந்திக்கிட்டிருக்கும் பொண்ணு. எல்லாப்பயலுக்கும் ஒரு ப்ளாஷ்பேக் இருக்கத்தான்யா செய்யும்? மறைக்கத்தான் செய்வான். இருந்தாலும் உருகி மருகும் காலா இதை குலசாமியிடம் மறைப்பதை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை என்னால். அப்படிக்கும் ஹூமா உள் நுழைந்தவுடன் இருவரின் கண் ஜாடைகளை கண்டு புரிந்து கொண்டு தாமாக , சுற்றியிருக்கும் எல்லோரையும் விலகிச்செல்ல பணிக்கும் அன்புச்செல்வியிடமா இப்படி ஒரு துரோகத்தை செய்தாய் காலா ?? உன்னை நாத்திகன் கூட மன்னிக்கமாட்டான் காலா..கரி காலா..!
சரி எனக்கு ஒண்ணு புரியவேயில்ல. ஹரிதாதா மதக்கலவரைத்த தூண்டி ஹூமா/காலா நிக்கா;வை நிறுத்தறார் சரி. அப்பால இவ்வளவு திமிரும் அடாவடியுமாக இருக்கும் காலா ஹூமாவை இழுத்துக்கொண்டு போய் தாலியக்கட்ட வேண்டிதுதானே ? ஏன் செய்யல?! ஹூமா பட்டப்படிப்புக்காக வெளிநாடு போறாராம். அப்பால அங்கயே நிக்கா பண்ணிண்டு ஆப்ரிக்கா போறாராம். நல்ல கதையொட்டம்ங்ணா! கபாலீல சொந்தப்பொண்டாட்டிய தேடி கடல் கடந்து வந்து காத்துக்கெடந்து தரிசிக்கிறார், இங்க கள்ளத்தனமா பொண்டாட்டிக்கு தெரியாம நள்ளிரவில் பைக்கில பின்னால ஏறிக்கொண்டு முன்னாள் காதலி ஜரீனா'வை சந்திக்கிறார் காலா.
படம் முழுக்க செட் தெள்ளத்தெளிவாகத்தெரிகிறது. தாராவி நானும் போயிருக்கேன், கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகள் மும்பையில் தங்கி வேலை பார்த்தவன் நான். காலா'வின் வீடு எனக்காட்டும் இடம் முன்பக்கம் விசாலமான போர்ட்டிக்கோ, அத்தனை பெரிய வீடு இப்படியெல்லாம் இருக்க வாய்ப்பேயில்லை. குறுக்கு மறுக்கு சந்துகள், சந்துகளினூடே வாய்க்கால் சாக்கடைகள், இருமருங்கும் துணி காயப்போட்டு அந்த முட்டுச்சந்து வழியே ஒற்றையடிப்பாதை போல ஒருவர் கூட நடக்கவியலாத இடம் அது. அதில் இத்தாதண்டி வீடும் காரும், போர்ட்டிக்கோ'வும் கொஞ்சம் கூட பொருந்தவில்லை.பாலத்தின் சண்டை,சம்பத்தை கொலை செய்வது எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியென தெரியும் செட்டூ. வேஸ்ட்.பேசாம பக்கத்து ஸ்க்ரீன்லயே 'ஜூராஸிக் பார்க் ஃபாலன் கிங்டம்' போட்ருந்தான் அதுக்குப்போயிருக்கலாம், கொஞ்சம் நம்புற மேரியாவது சிஜி இருந்திருக்கும்.
சாயாஜி ஷின்டே, நாநா பட்டேகர் இவாள்லாம் ஏன் தமிழ இப்டி பேஸ்ரா? யாராச்சும் கேக்கப்பிடாதோ?..இதுல சாயாஜி இங்க 'பாரதியாரா' வேற நடித்தார் பின்னரும் நேரடித்தமிழ்ப்படங்களில் தமிழில் பேசி நடிக்கவும் செய்தார். அவரா இப்படி பேசுவது ? நாநா பட்டெகருக்கும் இது இரண்டாவது படமென நினைக்கிறேன் தமிழ்ல. சிங்கத்தக்கூட்டி வந்து செல்லுல அடைச்சா மேரி இருக்கு. யாராலும் நெருங்கமுடியாத நடிப்பை அளிப்பார். 'தோடா ஸா ருமானி ஹோஜாயே' பாருங்க. அப்புறம் இந்த 'பாம்பே ட்ரீம்ஸ்'னு நினைக்கிறேன் அந்த படத்துல சேரிகளில் போதை மருந்து விற்பவராக நடித்திருப்பார். அப்ப்பா ...செம நடிப்பு. இங்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ்ச்சொற்களை மட்டுமே பேச வைத்துவிட்டு எல்லாம் மராத்தியில் என்று ஆக்கியிருந்தால் இன்னமும் ஆதென்டிக்காக இருந்திருக்கும். சம்பவம் நடத்துவது எல்லாம் எல்லா கேங்ஸ்ட்டர் படத்துலயும் வர்றது தானே? போஸ்ட்டர்ல கல்லவிட்டு எறிஞ்சவன தூக்கில தொங்கவிட்றது. வீட்டுக்கு தீ வெக்கிறது, வேணுமின்னே போலீஸத்தூண்டி விட்டு கலவரம் பண்றது எல்லாம் வழக்கமான க்ளீட்ஷே! சரி எதோ மெட்ராஸ் எடுத்த ரஞ்சித் 'நீட்ஷெ' பத்தீல்லாம் பேசீருப்பார்னு போனா எல்லாம் ஒரே க்ளீட்ஷே :)
ஆளாளுக்கு குறியீடு கிறீயீடுன்னு என்னென்னமோ எழுதுறாங்யள். ஹிட்ச்காக் ஒரு படத்தில் ஒரு டீ கப்பை எடுக்க மறந்து போய் காட்சியில் பதிவாகிவிடுகிறது, அதை எடிட்டிங்கிலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார். விமர்சகர்கள் அதற்கென ஆயிரத்தெட்டு குறீயீடு இட்லி ஈடு கண்டு பிடித்து ஹிட்காக்கிடமே சொன்னார்கள். அப்படி பல குறியீடுகளை என்னால் அடுக்க முடியும் இந்த ரவுடி ராஜ்யத்தில். லெனின் எப்பவுமே சிவப்பு சட்டையில் தான் வருகிறார். காலா எப்பவுமே கருப்பு சட்டையில் தான் வருகிறார். ஹரிதாதா எப்பவுமே வெள்ளைச்சட்டையில் தான் வருகிறார். எண்ணமெல்லாம் வண்ணமம்மா.... இதெல்லாம் குறியீடு இல்லீங்ளாண்ணா?! வெள்ளாவி வெக்கிறவனுக்குத்தான் இந்த குறியீடெல்லாம் அவசியம்..இல்லைன்னா உருப்படி துணில்லாம் எடம் மாறிப் போயிரும்லா...ஹிஹி...பெண்களை எந்த இடத்திலும் இழிநிலையில் படம் பேசவில்லை தான் அப்படிப்பட்ட காட்சிகளும் இங்கு இல்லை தான். இதே ரஞ்சித்தின் 'அட்டக்கத்தி'யில் நந்திதாவின் தோழி ஓடும் பஸ்ஸில என்ன செய்கிறார்னு மட்டும் எனக்குச்சொல்லுங்க தினேஷோட?!
பொழைக்கப்போன எடத்துல அடக்கஒடுக்கமா இருந்தமா, வேலைகீலையப்பாத்தமா அப்டி இப்டி சொத்து பத்த சேத்தமா, அப்டிய்யே நம்ம ஊர் பக்கம் ஒதுங்கினமான்னு இல்லாம 'நிலம் உரிமை'ன்னு குரல் எழுப்பினா எவன்தான் பொறுத்துக்குவான், உள்ளூர்க்காரன்லாம் முள்ளவிட்டு சாத்தமாட்டான் ? நம்ம ஐ.ட்டீ காரனுகளையே எடுத்துக்கலாம். சிலிக்கான் வேலிக்கு பொழைக்கப்போய் காசக்கீசப்பாத்துட்டு,(எதோ மோடி புண்ணியத்துல இன்னும் ஐ என் ஆர் :) டாலருக்கு நூறு ரூவா ஆகியிருச்சின்னா,) ஊர்ப்பக்கம் வந்து தோட்டந்தொறவ வாங்கிப்போட்டு காலா காலத்துல செட்டல் ஆகிறதப்பாக்காம, "சில்லிக்கான் வேலி எங்க ஊர் மேரீ" ன்னு சொல்லி உரிமை நிலம்னு போராட்னான்னு வெச்சுக்க. அப்டீல்லாம் பண்ண மாட்டாங்ய..இருந்தாலும் ஒரு பேச்சுக்கு வெச்சுக்குவோம், வெள்ளக்காரன் விடுவானா ? நியூக்ளீயர் பாமே போட்டு தரமட்டமா ஆக்கிட்டுத்தான் விடுவான். உண்டா இல்லியா ஞாயம்மாரே சொல்லுங்க. மண்ணின் மைந்தர்கள் விடமாட்டான்கள்னு சொல்ல வர்றேன். எழுபது எண்பதுகளில் தாக்கரே கோஷ்ட்டி தென்னிந்தியர்களை விரட்டி விரட்டி வெட்டிக்கொன்று கூறு போட்டது இதற்காகத்தான். அங்க போய் இருந்துக்கிட்டு என் நிலம் என் உரிமைன்னு எப்டி போராட்றது? நான் இந்தியன் எனக்கு எல்லா இடத்துலயும் உரிமை இருக்குன்னு பெங்களூர்லயே சொல்லமுடியாது. தூத்துக்குடியிலயே இருக்க முடிவதில்லை. என் உரிமைன்னு..இதுல வெளி மாநிலத்துல போயி??
இவ்வளவு களேபரத்துல அங்கங்க ஹீனமான குரலாக ஒலிக்கும் சந்தோஷ் நாராயண் இசை. நாநா பட்டேகருக்கென உருவாக்கியிருக்கும் தீம் இசை சால பாக உந்தி, வழக்கமான ஹிந்து மத ஆலயங்களில் ஒலிக்கும் அந்த கனமான மணியோசையுடன் , சலங்கையொலியும் பின்னர் பவுத்தமத ஆலயங்களில் ஒலிக்கும் சிங்கியொலியும், கொஞ்சம் இலங்கை ஆலயங்களில் ஒலிப்பதைப்போன்ற ஒலி புரட்டி எடுக்கிறது அந்த வேய்ங்குழலுடன். காடுகளில் திரியும் மாடுகளில் அவ்வப்போது திரும்பும்போது கணங்'கென்று ஒலிக்கும் அது போல நெஞ்சை விட்டகலாத கருவிசை. சப்பாஷ் சந்தோஷ். பாடல்களை சரிவரப்பயன்படுத்தவேயில்லை ரஞ்சித் அப்படியே டீல்ல விட்டுட்டார். இழப்பு சந்தோஷுக்குத்தான். கண்ணம்மாவை விரிவுபடுத்தி முக்கியபாடலாக மாற்ற முயற்சித்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக், ஓல்ட் ஃப்ளேம் எப்பவுமே ஸ்பெஷல் தான். இடையிடையே ஒலிக்கும் ஹிப் ஹாப்'ராப் பாடல்களை ஏன் முழுதுமாக ஒலிக்கவிடவில்லை, நேரங்கருதி சுருக்கிவிட்டார்களா ? 'வாடி என் தங்கச்சிலை' அப்படியே 'இத்துனூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா இல்ல இங்கிலீஷு முத்ததுல" பாட்டுதான். கொஞ்சம் கவ்வாலி கிவ்வாலில்லாம் விட்டு இடையில மராத்தி லாவணில்லாம் போட்டு புதுச்சரக்காக்கி இருக்கிறார். கேரியர் பெஸ்ட் 'நிலமே எங்கள் உரிமை' தான்!
வெளியே நிலைப்பாடு வேற, உள்ளே சினிமாவுக்கென நிலைப்பாடு வேறே என்று இருக்கும் ரசினி , சத்தியமாக அடிச்சு சொல்லலாம் இவர் பக்கா அரசியல்வாதி தான்யா :) பெரியார் படத்துக்கென ராசைய்யா இசையமைக்க மறுத்ததை நினைவு கூறலாம் இங்கு. துப்பாக்கில சுட்டும் எப்படி காலா கடையில் வர்றார்?,ஒவ்வொருத்தனும் காலாதாண்டே அந்த தாராவில. அதான்!
ரஜினி இனிமேலும் இப்படி கேங்ஸ்டர், டான் எல்லாம் விட்டுவிட்டு 'ஆறிலிருந்து அறுபது வரை', 'தப்புத்தாளங்கள்,' புவனா ஒரு கேள்விக்குறி, இப்படியான படங்களில் நடித்தால் மெச்சலாம். இல்லையெனில் பச்சன் போல 'பிங்க்' படத்தில் வயதுக்கேற்ற வேஷம் கட்டி ஆடலாம்! ரஞ்சித் இனிமேலும் வணிக நாயகர்களை கட்டி அழாமல், அட்டக்கத்தி போல புதுமுகங்களை வைத்துக்கொண்டே சாதிக்கலாம்.
கண்ணம்மா – பூவே செம்பூவே’ பாடலின் அடியொற்றி இசைத்தது. தொடர்ந்து
கேட்கும் போது புரிபடும். அது அழிக்கவியலாத பாடல். படத்தில் அதற்கான காட்சியமைப்பையும்
யாராலும் மறக்கவியலாது :) இங்கு கடைசியில் மழை பெய்யுது,பாடகருக்கு தெளிவான
குரலும், வார்த்தைகளும் வரவேண்டுமென்பதற்காக குழைவு இல்லாது போனது ஒரு பெரும் குறை.
பூவே செம்பூவே’யில் ஏசுதாஸின் குரலில் இருந்த குழைவு, அனிச்சமலர் போல,இங்கோ கொஞ்சம்
காட்டுப்பூப்போல இருக்கிறது.
கண்ணம்மா கண்ணம்மா’ என்ற சொற்களில் மட்டுமே குழைவு காட்டுகிறார்
பாடகர். கூட ஒரு பெண்மணியும் தீக்ஷிதா பாடியிருக்கிறார். அவர் குரல் இன்னமும் ப்ளண்ட்’
(Blunt) ஆக கொஞ்சமும் பாடலின் உணர்வுக்கு கிஞ்சித்தும் பொருத்தமின்றி ஒலிக்கிறது. தமிழறியாப் பெண்மணி
போல (சந்தோஷின் மனைவியாமே இவர்?) .சொற்களின் முடிவும் தெளிவும் கருதி திறந்து பாடுகிறார்.
இதுபோன்ற பாடல்களுக்கு அது சரி வராது. உயிர் தொட நினைக்கும் பாடலை (Soul Touching
Song) உளம் கூட தொட விடாது அந்நியமாக்குகிறது இருவரின் திறந்த முறையிலான பாடும் முறை,
.(Open Singing) .இந்த தீக்ஷிதா ’பிஸ்ஸாவில் டிஸ்கோ வுமன்’ மற்றும் இறுதிச் சுற்றில்
’ஏ சண்டக்காரா’ பாடினார். இது போன்ற மதுபானக்கூடப் பாடல்களுக்கு வேணுமானால் இவர் குரல் பொருத்தமானதாக இருக்கும்.
வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணி ஜெபா தமது கிட்டாரின்
தந்திகளை மெதுவாகவே அழுத்துகிறார். எனது குரு இப்படீல்லாம் அழுத்தினா முன்னால உக்காந்திருக்கவங்களுக்கு
கூட கேட்காது என்பார்.
பாடலின் துவக்கத்தில் ஆரம்பிக்கும் கிட்டார் மற்றும் வரிகள்
ஓடியபின் தொடரும் பியானோவின் விசைப்பலகை அழுத்தங்களும் அச்சசல் பூவே செம்பூவேதான்.
அடியிழை நாதம். எது மனதின் ஆழத்தில் கிடக்கிறதோ அது தான் மேலெழும்பி வரும். ‘கண்கள் இரண்டால்’ பாடலின் அடி நாதம் ’சின்னக் கண்ணன்
அழைக்கிறான்’. அது போலத்தான் இதுவும். பாடல் முழுக்க ப்ரோக்ராம் செய்யப்பட்ட விதம்
’பூவே செம்பூவே’ தான். முதலில் ஆரம்பிக்கும் கிட்டாரின் இசைக் குறிப்புகளை இங்குமங்கும்
மாற்றி ஒன்றிரண்டு குறிப்புகளை மாற்றிப்போட்ட போதும் ‘பூவே செம்பூவே’ தான் வந்து விழுகிறது.
சந்தோஷுக்கென ஒரு ஸ்டைல் இருக்கத்தான் செய்கிறது. மெட்ராஸில் ‘நான் நீ’ பாடலை ராசைய்யாவின்
’நானே நானா யாரோதானா’ பாடலின் இன்ஸ்பிரேஷனில் செய்திருந்தார். ( இந்த இன்ஸ்பிரேஷன்
என்ற சொல்லை வைத்துக்கொண்டு என்ன மாயாஜாலம் வேணுமானாலும் செய்யலாம். எழுத்தாளனுக்கு
‘பொயட்டிக் லைஸன்ஸ்’ போல.) அதுபோல இங்கும். ஜாஸ் டச் கொடுத்தால் மென்மை வந்துவிடும்
என எண்ணியிருக்கிறார் சநா!
இதே கண்ணம்மா’வை அக்கபெல்லா வெர்ஷனிலும் கொடுத்திருக்கிறார்
சந்தோஷ். அக்கபெல்லா வெர்ஷன் என்பது இசைக் கருவிகள் எவற்றின் துணையுமின்றி வெறும் குரலை
மட்டுமே வைத்து பதிவு செய்வது. காரோக்கி’க்கு எதிர்ப்பதம் :) இருப்பினும்
சின்ன இழையில் கிட்டார் இழைக்கிறது இங்கும். இங்கிலீஷ் பாடல்களில் இந்த ‘அன் ப்ளக்டு’
(Unplugged) வெர்ஷன்ஸ் ரொம்ப பிரபலம். கொஞ்சமே இசைக்கருவிகள் வைத்துக் கொண்டு இசைப்பது
பாடுவது. சேனல் விஎச்1’ல் அடிக்கடி இது போன்று மேலை நாட்டு தனிப்பாடற் திரட்டுப் பாடகர்களின்
இசைக்கோவைகள் இவ்வாறாக இசைக்கப் படுவதுண்டு.
02:53 ல் துவங்கும் கிட்டார் 03:15 வரை தனி ஆவர்த்தனம். அருமை.
இது காறும் பின்னில் இருந்துகொண்டு வரிகளை முந்தவிட்டு வாசித்ததற்கு இப்போது தமக்கென
கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறர் ஜெபா.
பின்னில் ஹார்மனிக்கென ‘தநநந தந்நந தநநந தந்நந தந்நந’ என ஒலிக்கவிட்டது
’நாசரின் தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ’ பாடலின் பாணி. இந்தப்பாடலின் மீது
ரஞ்சித்துக்கு அப்படி ஒரு காதல். சிலரைப்பின்னில் பாடவைத்து இல்லையெனில் தலைவன் தலைவி
தனித்திருக்கும்போது ரேடியோவிலாது ஓடவிட்டு என ஆங்காங்கே பொருத்திவிடுவார் தமது படங்களில்.
”வான் பார்த்து ஏங்கும் சிறு புள்ளின் தாகம்” எனப்பாடுகிறார்
அந்தப்பெண்மணி.அது ”சிறு புல்லின் தாகம்”
என்றுதான் உமாதேவி எழுதியிருக்கவேணும். இருப்பினும் எனக்கொரு ஐயம் சாதகப்புள்’ளை பறவையை
மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருப்பாரோவென .ஏனெனில் அப்படி ஒரு பறவை வெறும் மழைநீரை
மட்டுமே உண்டு வாழ்ந்ததாக இலக்கியங்களில் கூறப்படல் உண்டு. ‘மழையை அருந்தும் சாதகப்பறவை
போல நானும் வாழ்கிறேன்’ என வைரமுத்து எழுதினார். இந்த ஐயம் எனக்கேன் உதித்தது என்றால் பின்னில் வரும்
வரிகளில் அவர் அஃறிணையை, மீனைப்பற்றி இங்கனம் எழுதியிருக்கிறார். ’நீரின்றி மீனும்
சேறுண்டு வாழும் வாழ்விங்கு வாழ்வாகுமோ’ வென. பாடலைப்பாடும் இந்தத்தமிழறியா(?)ப் பெண்
மணிகளும் சில வேளைகளில் அதிகம் யோசிக்க வைத்து விடுகின்றனர் எழுதிய தமிழச்சியையும் வாசிக்கும்
கேட்கும் மறத்தமிழனையும் :) :)
இத்தனை இருப்பினும் ஆற அமர உட்கார்ந்து கேட்கவைக்கும் பாடல்
தான் இது.. இதை மாயநதி’யுடன் ஒப்பிட்டு சிலர் எழுதியிருந்தனர். மெலடி வரிசையில் வேணுமானால்
இவைஇரண்டும் ஒரு தட்டில் வைக்கலாமே தவிர வேறேதும் ஒப்புமை இல்லை. #கண்ணம்மா
உரிமையை
மீட்போம் சந்தோஷுக்கு கேரியர் பெஸ்ட்! பாடல் என்னவோ கவ்வாலியில் தொடங்கிய
போதும், தொடர்ந்தும் கொண்டு செல்லுதல் அத்தனையும் தமிழ்ப்பாடல் போலவே
ஒலிக்கிறது. டெஸர்ட் ரோஸ் போல பின்னில் பதுங்கி இசைக்கும் ஹார்மனி. இசைக்கு
முக்கியத்துவம் தராமல் அத்தனையும் வரிகளை முன்னுக்கு கொண்டு வந்து
இசைத்திருக்கிறார் சநா.! ஏற்கனவே ’ஆடி போனா ஆவணி’யென இசைத்தார். அதே
பாணியில் வெறும் தபலாவையும், பேஸ் கிட்டாரையும் வைத்துக் கொண்டு அவ்வப்போது
ஹார்மோனியம் எட்டிப் பார்க்க இங்கு இசை சாம்ராஜ்யம் சநா. சம்மதிக்கணும்டே.
இசைச்சூழல் பாம்பேயானதால் சூஃபி, மற்றும் கவ்வாலிக்கு ஒரு தடையும் இல்லை.
முதலில் கேட்டவுடன் அட இது கவ்வாலி இசையல்லவா என அடுத்த பாடலுக்கு தாவி
விட்டேன்.
ரஹ்மானின் கவ்வாலி,சூஃபி இசை என்பது அதன் ஒரிஜினல்
பாங்கில் இசைப்பது. குன் ஃபாயா குன், இன்னமும் எத்தனையோ
பாடல்களைச்சொல்லலாம். இத்தனை நிமிடங்களில் முடித்தாகவேண்டும் என்ற
கட்டாயமின்றி பாடும் வரை பாடு என்ற பாங்கில் இசைப்பது. லயித்தலெல்லாம்
உளப்பாங்கைப் பொருத்த விஷயம். இங்கும் பாடல் ஆறு நிமிடத்துக்கும் மேல் வரை
நீடிக்கிறது..இங்கு சநா அதை கொஞ்சம் ராசைய்யா பாணியில் இசைத்திருக்கிறார்.
எனில் அதன் ஒரிஜினல் இசைப்பாணியை இரவல் எடுத்துக்கொண்டு அதை தமிழ்
ரசிகர்களை மனதில் வைத்து ‘இது “சநா”வின் பாடல் என இசைப்பது. இது மொத்தமும்
ராசைய்யாவின் பாணி. அப்படியே கொள்ளை கொண்டு போகிறது.
இதே போல யுவன்
ஒரு பாடலை இசைக்க முற்பட்டார் ( அப்படித்தான் சொல்ல வேணும்) அஞ்சான்
படத்தில் ”காதல் ஆசை யாரை விட்டதோ” வென. அது கொஞ்சம் காதலுடன் இசைத்தது.
இறைவனுக்கென பாடும் கவ்வாலி/சூஃபி இசை எங்கனம் காதலுக்கு பொருந்தும் என
எண்ணியதால் யாராலும் ரசிக்க இயலாமலே போய் விட்டது. எனக்கு அத்தனை
பிடிக்கவில்லை அந்தப்பாடல். எல்லாம் ஒன்று தானே என விவாதிக்கலாம். காதல்,
கருணை, பக்தி எல்லாம் உருகி வழியும் உணர்வு தானே என அப்படி இல்லை. காதலில்
காமம் கலந்து விடும். பிறகெங்கே அதில் பக்தி?
இங்கு நிலமே உரிமை’
என்பது ஆதங்கத்தில் ஒலிக்கிறது. வீறு கொண்டு எழுந்து போராடி பின்
எழும்பவியலாது தோற்று, தம்மை ஆசுவாசப் படுத்திக்கொள்ளவும் மீண்டும் எழுந்து
போராடவும் அறைகூவல் இது. உள்ளுக்குள் இருக்கும் வருத்தம் தொனிப்பதற்கு
பக்திரசம் பொருந்தும்.
நிலமே உரிமை. அதுக்காகத்தானே ஈழத்தில் அத்தனை
போராட்டம். இத்தனை காத்திரமான வரிகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே கேட்க
இயல்வது சொய்வு. பாடலில் அடித்து உருட்டும் தபலா உள்ளுக்குள் இருக்கும்
அத்தனை துயரத்தையும் துடைத்தெறியும்! அநாவசிய இசைக்கலப்பின்றி, முறையே
தீர்மானித்து அற்புதமாக வழங்கப் பட்டிருக்கிறது இந்தப்பாடல். என்னையும்
கவ்வாலி கேட்க வைத்துவிட்டார் சநா! அதுவரை குரல்களுடன் பயணித்த தபலா 02:06
லிருந்து தொடங்கி 02:13 வரை தனித்தே பயணிப்பது அத்தனை அருமை. கிஞ்சித்தும்
வேகம் தாள கதி மாற்றாது தொடர்ந்து இசைக்கிறது
03:14 ல் தொடங்கும்
அந்த ஹார்மனியும் அதைத் தொடரும் சரளி வரிசையும் சிலிர்கக வைக்கும்.
இந்தப்பாடலை ‘கடையநல்லூர் மஜீத்’ அல்லது ’நாகூர்’இ எம் ஹனீஃபா’
பாடியிருந்தால் இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும். பின்னில் இசைக்கும்
அந்த அத்தனை ஆலாபனைகளுக்கும் இவ்விருவரின் குரல் சாலப்பொருத்தம். ராசைய்யா
’செம்பருத்தி’யில் ஒரு சோகப்பாடலை கவ்வாலி ஸ்டைலில் இசைத்திருப்பார்
’நட்டநடுக்கடலில் நான்பாடும் பாட்டு’ என்று. அதில் இந்த இடத்தில் ‘’ஆற்றிலே
இக்கரையில் நின்று’வென கூவும் ஆலாபனையில் மயங்காதவர் குறைவு.
’போராடடா வாளேந்தடா’ என ’அலைஓசை’யில் விஜய்காந்துக்கென இசைத்தார் ராசைய்யா.
நிலமே எங்க உரிமை என ரஜினிகாந்துக்கென இசைத்திருக்கிறார் சநா!
அந்தக்காலத்தில் அது ஒரு செம ஹிட் பாடல்.கிளர்ந்தெழும் இசை கொண்டது.
இன்றும் இசைத்தால் வீறு கொண்டு எழும் அத்தனை உணர்வுகளும். அந்தப்பாடலில்
ராசைய்யா இடை இசைக்கென ‘ஒயிலாட்டத்தின் இசையைக் கொடுத்திருப்பார். இங்கு
சநா, சூழலுக்கென உகந்தவாறு கவ்வாலியை கையிலெடுத்திருக்கிறார். கொஞ்சம்
இரண்டு பாடல்களையும் கூடவே ஒலிக்கவிட்டுப்பாருங்களேன் உங்களுக்கே
புரிபடும். சின்னப்பொறியே பெரும் அனலாகுமே சிங்க இனமே எழுமே’ என
பாடிக்கொண்டே வரும்போது இடையில் நிறுத்துவார் இசையனைத்தையும், கொஞ்ச
நேரத்தில் நாமே நம்மையறியாமல் பாட ஆரம்பித்து விடுவோம் ‘ போராட்டா ஒரு
வாளேந்தடா வென அது தான் போராட்டத்தின் வெற்றி.
எனக்கென்னவோ ரஞ்சித் இந்த “போராடடா”வையே மனதில் வைத்துக்கொண்டே உரிமையை மீட்கச் சொல்லியிருப்பார் எனத்தோணுகிறது
”வண்ணங்களத்தீட்டு இது வானவில்லின் கூத்து அட சொந்தம் எது கேட்டா அந்த விண்மீன்களைக்காட்டு கதவில்லாத கூட்டில் கனவுகள் ஏராளம் உண்டு உரிமைக்கு ஒன்றாகும் வீட்டில் விடுதலை எப்போதும் உண்டு.” #உரிமையைமீட்போம்!.
ஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும்
கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ஹிந்தி
பெல்ட்டிலிருந்து வந்தவர்கள் தான். சாயங்கால வேளைகளில் இல்லை பொழுது
போகாது எங்கும் வெளியில் செல்லாத சனி ஞாயிறுகளில் பொதுவில் வைத்திருக்கும்
டீவீ'யில் பாடல்கள்/படம் பார்ப்பது வழக்கம். எல்லாவருக்கும் ஒரே டீவி.
மக்கள் அனைவரும் ஹிந்தி பெல்ட் ஆனதால் வழக்கமாக ஹிந்தி பாடல்களே
பெரும்பாலும் ஓடும். வேறு வழியின்றி நானும் உட்கார்ந்து பார்த்துத் தொலைப்பது
வழக்கம். அவர்கள் அடிக்கடி பார்க்கும் சேனல்கள் ஒன்றைக்கூட நான்
பெங்களூரில் பார்த்தில்லை. அப்படியான சேனல்களும் இன்னபிற பிரபல ஸ்டார்
ஹிந்தி போன்ற சேனல்களும் ஒலிக்கும். எனக்கும் ஹிந்திப் பாடல்களுக்கும் ஏழாம்
பொருத்தம். எனக்கென்னவோ ஹிந்திப்பாடல்கள் ஒரு போதும் தமிழின் தரத்தை
ஒருக்காலும் எட்டுவதே இல்லை என்றே எண்ணுவேன். அதே கூற்று உறுதிப்
படுத்தப்பட்டது.
அந்த ஒரு
மாதத்தில். அமர்ந்து பார்த்தவைகளில் கொஞ்சமும் உழைப்பின்றி, கூடுதல்
கற்பனைகளின்றி வழக்கம்போல பஞ்சாபி பாங்க்ராவையும் , ஹிந்துஸ்தானியையும் ,
பின்னர் ஃப்யூஷன் பேர்வழி என்ற பெயரில் இரண்டையும் கலந்துகட்டி
ஆகத்திராபையாகவே பாடல்கள் ஒலித்தன. தமிழ் மருந்துக்குக்கூட ஒலிக்காது.
நானும் சர்ஃப் செய்து அலுத்துப் போனேன். இதிலென்ன ப்யூட்டி என்றால்
ரஹ்மானின் பாடல்கள் ஒன்று போலும் ஒரு சேனலிலும் ஒலிப்பதில்லை. ஆமாம் நிஜம்.
ஒரு மாதம் இருந்திருக்கிறேன் நண்பர்களே.. ஒரு பாடலும் எந்தன் காதில்
விழுந்ததேயில்லை. எத்தனை சேனல் அத்தனையும் ஹிந்தியன்றி வேறேதுமில்லை.
என்றாலும் ஒன்றிலும் நம்ம தமிழ் ரஹ்மானின் நேரடி ஹிந்திப்பாடல்களோ இல்லை
மொழி மாற்ற ஹிந்தி பாடல்களோ காணவேயில்லை. அது தான் உண்மை. நம்மைப்போலவே
அவர்களும் ரஹ்மானை ஒதுக்கிவிட்டனர் என்றே தோன்றுகிறது. உள்ளுக்குள்
மிதப்பில் என்னடா ரஹ்மான் பாட்டத்தான கேப்பீஹ' என்று இறுமாப்பில்
இருந்தவனுக்கு பெரும் இடி. மேலே அறையில் இருக்கும் பொழுதுகளில் அங்கனம்
ரஹ்மான் பாடல்கள் ஒலிக்குமாயின் சேனல் மாற்றம் செய்கிறார்களாவென காது
கொடுத்துக் கேட்பேன். ஹ்ஹூ,ம் அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை.
இப்போது தேசீய விருதுகள் மீண்டும் ஒரு முறை ரஹ்மானுக்கு
கொடுக்கப்பட்டிருக்கிறது. யார் கேட்கிறார்கள் ஐயா உமது பாடல்களை ?!
என்னைக்கேட்டால் ரஹ்மானும் ராசைய்யாவும் இந்த விருதுகளிலிருந்து விலகி
இருக்கலாம். எல்லாம் செய்தாயிற்று, எல்லாப்பாடல்களிலும் அத்தனை வித
பரீட்சார்த்த முயற்சிகளும் செய்தாயிற்று. இளைஞர்களுக்கு வழி விடுங்க ஹூஸூர்
எஸமான்.