பீலா பீலா’ன்னு ஒரு பாட்டு போட்ருக்கான் தம்பி அநிருத் ஆஹா.. சிலோன்
‘பைலா’ மீசங்கி மச்சி. நல்ல ரெட்ரொ. அருமை. ரொம்ப நாளாச்சி இது மாதிரி
பாடல் கேட்டு. அவனுக்கு எல்லாம் தெரியுதுடா. :)
இதே பைலா’ இசையில் தேவா ரொம்ப நாள் முன்னால ‘சிலோனு சிங்களப்பெண்ணே
சிணுங்காதே’ன்னு இசைத்திருந்தார். அப்புறமும் ரொம்ப பிரபலமான ‘சுராங்கனி
சுராங்கனி’ சிலோன் மனோகரன் பாடினது தான் இந்தப்பைலா.! இதே பாடலை ராசைய்யா
‘அவர் எனக்கே சொந்தம்’ படத்தில் அப்படியே எடுத்து பயன்படுத்தியிருந்தார்
மலேசியா வாசுதேவனைப்பாடவைத்து. வரிகள் மட்டும்.தமிழில்..
ஈழத்தில் எழுபதுகளில் பொப்பிசைப்பாடல்கள் ( பாப் இசைப்பாடல்கள் தான் …அஹ்ஹ்ஹ்ஹ்ஹா அவங்க அப்டித்தான் சொல்லுவாங்க. :)
) வெளிவந்த ‘சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..பள்ளிக்கு போனாளோ ?” என்ற
மிகப்பிரபலமான பாடல். எல்லாம் பைலா.! பைலா’ன்னா இசை’ என்றர்த்தமாம்
சிங்களத்தில். இறங்கிப்போட்ருக்கான் தம்பி. எந்தவொரு மாற்றமும், இடைச்
செருகலும் இல்லாது ஒரிஜினல் ரெட்ரோ. மீளக்கொணர்ந்து கொடுத்திருக்கிறார்.:) கேளுங்கோ கேளுங்கோ…கேட்டுக்கிட்டே இருங்கோ :)
இறைவா அடுத்த ராக் அநிருத்திடமிருந்து. பரவலாக ராக்’ இசையில் அமைந்த இது
போன்ற பாடல்களை ரசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் அனைவரும், ராக்ஸ்டார்
பட்டத்துக்கு பொருத்தமானவர் தான் தம்பி அநிருத். ஜீவீப்பீல்லாம் நடிக்க
வந்துட்டான். தம்பி நடிக்கவும் வரலாம் அத்தனை தகுதியும் இருக்கு. என்ன
பாக்றதுக்கு ரகுவரன் மாதிரி தெரிவார். அதனால பரவால்ல. தனுஷ் கூட இந்த ஒடம்ப
வெச்சுக்கிட்டே இந்தப்போடு போடலியா?! :) இது கொஞ்சம் காதல் ஏக்கம். ஐயா படத்துல வந்த அந்தப்பாடல் போல ‘ஒரு வார்த்த சொல்ல ஒரு வருசம் காத்திருந்தேன்’
ரகம். அங்கயும் நயன் தான் ஆஹா.. சாதனா சர்கம் ஆர்வமிகுதியில பூரிப்பில்
பாடுவார். கேகே இருக்கும் அத்தனை சலிப்பையும் சொல்லி அழுவார். அதே போல
இங்கும்.
எம்ஜியார்
பாடல்கள், சிவாஜி பாடல்கள் என இன்னமும் சொல்லிக்கொண்டு அலைவதும்,அதைப்பாடிய
டி எம் எஸ்ஸுக்கு எந்தப்பெயரும் வராது எல்லாப்பெயர்களும் நடிகர்களுக்கு
கிடைத்த காலம் போய், இந்தப்பாடலில் அநிருத்தும், ஜொனிதாவும்
தோன்றிப்பாடுகின்றனர், எனக்கென்னவோ இனியும் சிவகாவும், நயனும் அபிநயித்த
காட்சிகள் வெளி வந்த போதிலும் இவர்கள் தோன்றிப்பாடிய வெர்ஷனே நிலைக்கும் என
நினைக்கிறேன். அத்தனை ஆழமாகப் பதிந்துவிட்டது.
இந்தச்சிறு
உருவத்துக்குள் இருந்து , மழைக்குருவி போல அத்தனை உச்சஸ்தாயி எல்லாம் செம.
சம்மதிக்கணும் தம்பி அநிருத். ‘உட்தா பஞ்சாப்’பில் ராக் இசைக்கலைஞர்கள்
பாடுமுன் கொஞ்சம் வீட்(கஞ்சா) உட்கொண்டே பாடுவர். இல்லாவிட்டால் அத்தனை
உற்சாகமும், உத்வேகமும் குரல்வளையிலிருந்து வெளிவராது.கிட்டத்தட்ட அத்தனை
ராக் இசைக்கலைஞர்களுமே ‘உட்கொள்ளும்’ வகையினர் தான். அதெல்லாம் எடுக்காமல்
பாட முடியாதா எனக்கேட்கலாம்,டி எம் எஸ், மதுரை சோமு இவர்களெல்லாம்
அந்தக்காலத்தில் என்ன உட்கொண்டு பாடினர் அத்தனை உச்சஸ்தாயியில்.?.. ஏன்
பாரதி கூட எழுத அமருமுன்னர் உருண்டை’யை விழுங்கி விட்டே எழுத ஆரம்பிப்பார்
என அறிந்திருக்கிறேன்.
‘கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்’ என
அற்புதமான ஜாஸ் இசையில் வெளிவந்த அந்தப்பாடலில் முன் இசையாக வரும் அந்த
மென்மையான கிட்டாரின் ஒலியை ஒத்திருக்கும் இங்கும் முன்னிசை. கெபா
ஜெரீமியாவின் கிட்டார். ஆஹா ராக் இசைப்பாடலுக்கு முன்னிசை ஜாஸிலா. :)
மெலடியும் ராக்’கும் அருமையான கலவை இதே கிட்டார் பீஸ் , ஜொனிதா’வின்
பாடும் அத்தனை பாகங்களிலும் கொஞ்சி விளையாடுகிறது இருப்பினும் அநிருத்தின்
குரல் வா வா வென ஒலிக்கும் போதெல்லாம் பின்னில் அரற்றும் அந்த அழுத்தமான
மின்கித்தாரின் ஒலி இது ஒரிஜினல் ராக்’டே என்று கூவ வைக்கும். ஜொனிதாவின்
பகுதியில் ஆழமாக அந்த பெர்குஷன் அடி மனதைக்கலக்குகிறது இதே ஜொனிதா காந்தி
தான் ‘எந்திரன் 1-ல் லேடியோ பாடினவர் :) ‘நான் விரும்பி அடையும் பொன்சிறையே’ #இறைவா
பரமக்குடியில் எங்கள் வீட்டுக்கு ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ என்று
ராமகிருஷ்ணா மடத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கையை கொண்டு வந்து
போடுவதற்காக ஒரு பிராமண முதியவர் எப்போதும்,மாதந்தோரும் வருவார். அவர்
கையில் உள்ள துணிப்பையில் புத்தகக்கட்டும், மறுகையில் ஒரு குடையும்
பிடித்தவாறு வந்துசேருவார். காலை பதினோரு மணியளவில் வேகாத வெய்யிலில் வந்து
சேருவார். அதில் வரும் படக்கதையை நான் விரும்பிப்படிப்பது வழக்கம்.
வரும்போதெல்லாம் என்னை எங்கே என்று தேடிக்கொண்டே வருவார் , என்னைக்கண்டதும்
தம்பி, ‘இன்னிக்கு என்ன செய்ற’ என்று கேட்டுக்கொண்டே கொஞ்சம் சிக்கலான
கணக்குகளை கொடுத்து விடுவிக்கச்சொல்வார். எனக்கு அப்போதே கணக்கு என்றாலே
பிணக்கு ஆமணக்கு வகையறாதான். எதோ என்னாலியன்றவரை விடையளிக்க முற்படுவேன்.
சிரித்துக்கொண்டே , ஹ்ம், ‘கொஞ்சம் சொம்பில் தண்ணீர் கொண்டுவா’ என்று
கூறிக்கொண்டு வெளியே இருக்கும் மரக்கட்டிலில் உட்கார்ந்து கொண்டு , எப்படி
எளிதாக கணக்குகளை விடுவிப்பது என்று சில சூத்திரங்களை எனக்கு
வேண்டாமென்றாலும் விளக்கிக்கூறுவார்.
மாதத்தில் இன்ன நாளில்தான்
வருவார் என்று தெரியாது. கடைசி வாரம் இல்லையேல் முதல் வாரத்தில் இன்னும்
சிக்கலான கணக்குகளோடு ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தையும்’ கூடவே கொண்டு வருவார்.
ஒவ்வொரு மாதமும் கணக்கு ஏகத்துக்கு சிக்கலாகிக்கொண்டே போக எனக்கு ஏற்கனவே
வெறுப்பு. எப்படியாவது அவர் வரும் போது வீட்டில் இல்லாமல் போய்விடவேண்டும்
என நினைப்பேன். ஒவ்வொரு தடவையும் சரியாக மாட்டிக்கொள்வேன் அவரிடம். எங்கள்
ஊரில் கணக்காசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர்.
ஒரு நாள் அவரின்
பைக்கூடும் குடையும் அவர் தூரத்தே வருவதைக்காட்டிக் கொடுத்தது. ஓடிப்போய்
அருகிலிருந்த பெரியம்மாவின் வீட்டில் போய் ஒளிந்துகொண்டேன். வந்தவர்
புத்தகத்தைக்கொடுத்துவிட்டு எனக்காக காத்திருந்து பார்த்திருக்கிறார். அவர்
சென்றதும் எனது அண்ணனின் பையன், நான் ஒளிந்து கொண்டிருந்ததைப்
பார்த்துவிட்டு,அவனின் அம்மா’விடம் எனக்கு முன்னாலேயே சொல்லிவிட்டான்
“அம்மா அந்தத்தாத்தா , ராமகிருஷ்ணவிஜயம் போட்ற தாத்தா இவங்களைத்
தேடிக்கிட்டிருந்து விட்டு, கணக்கு கேட்பேன்னு நினைச்சு ஓடி
ஒளிஞ்சுக்கிட்டானா’ன்னு கேட்டார்மா என்று போட்டு உடைத்துவிட்டான்.
பின்னரும் அவர் வருவதும் நான் ஒளிவதும் சிலநாட்களில் மாட்டிக்கொள்வதுமாகக்
கழிந்தது.
அவர் கணக்கு சொல்லிக்கொடுக்கும் முறையில் , கடுமையாக இருப்பார், அதனால் யாரும் அவரிடம் ட்யூஷன் கூட வைத்துக்கொள்ளமாட்டர்கள் :)
பிறகு சில மாதங்களாக அவரைக்காணவில்லை. நிம்மதி. திடீரென ஒரு நாள் அதே பையை
எடுத்துக்கொண்டு ஒரு நடுத்தர வயதினன், எங்கள் வீட்டிற்கு வந்து , ‘பெரிய
ஐயா’ இந்தப்புத்தகத்தை கொடுத்துவிட்டு காசு வாங்கி வரச்சொன்னார்கள்’
என்றான். ‘இந்தப்புத்தகம் வாங்குவதே அந்த பெரியவர் தள்ளாத வயதில் வந்து
கொடுக்கிறாரே’ என்றுதான் எனச்சொல்லி ‘புத்தகம் வேண்டாம்’ எனக்கூறி
அனுப்பிவிட்டனர். புத்தகமும், தர்மசங்கடங்களை உண்டாக்கும் கணக்குகளுக்கும்
ஒரு பெரிய டாட்டா :)
இன்றைக்கு பெங்களூரில் அப்பார்ட்மெண்ட்டில்,கீழ்த்தளத்தில் செக்யூரிட்டி
அனைவர்க்கும் வரும் தபாலை வீடு வாரியாக பிரித்து வைப்பது வழக்கம்.அப்போது
அந்த ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ என் கண்ணில் பட்டது. மேலிருக்கும் எந்த
வீட்டினரோ அந்தப்புத்தகத்துக்கு சந்தா கட்டியிருப்பர் போல, நல்ல
பிளாஸ்ட்டிக் தாள் பேக்’கில் பெயரும், முகவரியும் தெளிவாகத்தெரியும்படி
அந்த ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ மேஜையில் கிடந்தது. புத்தகமும் அதில்
தொடர்ந்தும் வாசித்த படக்கதைகளும் மறந்துபோய் ,கணக்கும் பைக்கூட்டுடன்
குடையும் கையில் வைத்திருந்த அந்த முதியவர் மட்டுமே தெரிந்தார்.
இந்த
தீவாளிக்கு Sennheiser CX 300 II Precision Noise Isolating In-Ear
Headphone வாங்கினேன். என்னா வெலன்னு அமேஸான்ல பாக்கலாம், அத என் லாப்டாப்ல
செருகி, 'ஹெலிகாப்டர்ல பெல்ட் போட்டு இறுக்கி உக்காரவெச்சு அப்பால மேடைல
எறக்கிவிட்டு, எப்டீப்பா இவ்ளவ் எளிமையா இருக்கீங்கன்னு கேட்டாங்களாமே,
அந்தப்பாட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன். ஏம்ப்பா ராஹ்மான் வெச்சு செய்ற ?.
புதுசா ஏதும் செய்யக்கூடாதா? சின்னப்புள்ளைஹ ஸ்கூல்ல பீட்டீ பீரியட்க்கு
ட்ரில் வாசிச்ச மேரி ஒரு மீஸங்கி. பின்னால ஓ ஓன்னு கத்தவிட்டு
கடுப்பேத்றார். என்னா ஒரு இன்னோவேஷனே இல்லை. சரக்கு மட்டம். இத 2030ல தாம்
கேக்கணும்னு ஒரு கூட்டம் கெளம்பிருக்கு.
ஆமா அது ராஜாளி'யா இல்ல
ராசாலி'யா? தமிழால் வளர்ந்த குழந்தை கார்க்கி,யாரு கண்ணு வெச்சான்னு
தெரியல, இப்டீல்லாம் எழுத ஆரம்பிச்சிருச்சி. கொஞ்சம் முன்னால தான் கவிஞர்
தாமரை 'பறக்கும் ராசாளியே'ன்னு எழுதினார். (அதிலும் 'ஜா' வடமொழி இல்லை )
வலுக்கட்டாயமாக தமிழ் மட்டுமே எழுதுவேன் என்ற பிடிவாதத்துடன் எழுதி
வருகிறார். ஆணைத் தொடர்கள் இயந்திர மனிதனுக்கு தமிழிலும் எழுதலாம்ப்பா.
பாட்ட கேக்கவே முடியலையே இங்க. ஹ்ம்.. ஒரு வர்சம் ஆனப்புறம் கூட.
'தள்ளிப்போகாதே' வையே இன்னும் கேக்க சகிக்கலை. என்னா பண்றது அவருக்கு
வாய்ச்சத குடுக்றார்.
இந்திர லோகத்து சுந்தரியே' சித் ஸ்ரீராமா அது
?. இப்பதான் தர்புகா சிவா இசைல ஒரு பாட்டு இன்னமும் லூப்ல உந்தி.
மறுவார்த்தை பேசாதே'ன்னு. இங்க யய்ய்யய்யா யாய்ய்யாஆஆஆ... ஒரே குஷ்டம்ப்பா.
எந்திரன் ஒண்ணுலயாவது நல்ல மெலடி கேட்கக் கிடைத்தது, இங்க எல்லாம் ஒரே
எலெக்ட்ரானிக் இசை. இரைச்சல். வேஸ்ட்டு. #2.0
'யாவரும் பதிப்பகம்' ஜீவகரிகாலன் பகிர்ந்த 'போர்ஹேஸ் எழுத்துகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு வெளியீடு' காணொலிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். போர்ஹேஸ்/ இடாலொ கால்வினோ/சார்த்தர் என்ற பெயர்கள் எனக்கு அறிமுகமானது சில ஆண்டுகள் முன்பாகத்தான். பிரம்மராஜனின் வேர்ட்ப்ரஸ் வலைத்தளத்தில் ஒரு சிலமுறைகள் வாசித்திருக்கிறேன். காணொலியில் குணா, பின்னர் பாலா மற்றும் ஆசிரியர் பிரம்மராஜனும் பேசியவற்றை பார்த்தேன். என்னைபொருத்தவரையில் பேசியவர்களில் கொஞ்சம் ஆதன்டிக்காக பேசியது பாலா மட்டுந்தான் எனத்தோன்றியது. பாலா அதிலிருக்கும் கதைகளைப்பற்றி அதிகம் பேசவில்லை, இருப்பினும் பொதுவாக போர்ஹேஸ் எப்படிப்பட்டவர், எத்தகைய மானுடம் அவர், ஆன்ட்டி மார்டன் (anti modern),எடெர்னிட்டி,இம்மார்ட்டலிட்டி, டைம் என்பன பற்றியே அதிகம் பேசுகின்றன போர்ஹேஸின் எழுத்துகள்.மேலும் பிறக்கும்போதே கிழவனாகப் பிறந்தவர் ;), அவரின் குணாதிசயங்கள் என்ன என்பனவற்றை விவரித்தார். அவரின் எழுத்துகள் மூலமே இத்தனையையும் அறிய முடிந்திருக்கிறது. சிற்சில பேட்டிகளையும் மேற்கோள் காட்டி பேசினார். மொழிபெயர்ப்பு எங்கனம் ஆரம்பித்தது என்ற விளக்கம் எனக்கு புதிது. இப்படியெல்லாம் சில நிகழ்ச்சிகள் வாயிலாகத்தான் இப்படிப்பட்ட விஷயங்கள் தெரியவருகின்றன .
குணா தொகுப்பை முழுதுமாக வாசிக்கவில்லை என்பது அவர் பேசிய விதத்திலேயே தெரிந்தது. 'வந்து வந்து என நிறைய வந்(த)து அவர் பேச்சில். இருப்பினும் போர்ஹேஸ் அவர்தம் சிறு வயதில் வசித்த வீட்டிற்கு சென்றிருந்தேன் என்றார்.தமிழனாகப்பிறந்த அனைவருக்கும் ஒருமுறையேனும் பாரதி வசித்த இல்லத்துக்கு செல்லவேணும் என்ற அவா. அதிலென்ன இருக்கிறது. இருப்பினும் இடம்,காலம், பொருள் எல்லாமே முக்கியமாகத்தான் இருக்கிறது அவன் எழுத்தாளனாயினும் கூட!
நானும் தான் ப்ராக்(செக்கோஸ்லொவேக்கியா) நகரில் சுற்றித்திரிந்த காலங்கள் உண்டு. இருந்தாலும் கஃப்க்கா வசித்த வீட்டைப்பார்க்க ஒருமுறை கூடப்போகவேயில்லை. பல முறை சென்றுவந்த ஜூவிஷ் சினகாக் (கல்லறை)க்குப்பின்னர் உள்ள தெருவில் தான் வசித்திருக்கிறார் என்பது விக்கி மூலமாகத்தெரிய வந்தது. ஏன் போய்ப்பார்க்கவில்லை,,, அப்பல்லாம் எனக்கு எழுத்து/இலக்கியம்/கவிதைகள் மற்றும் இன்னபிற வஸ்துக்களில் பரிச்சயமில்லை. நிறைய மேற்கத்திய இசைக்கூடங்களுக்கு கால்கள் வலிக்க வலிக்க நடந்தே சென்று ரசித்திருக்கிறேன். ஓவியக்கண்காட்சிகளில் பல மணி நேரம் செலவழித்து இருக்கிறேன். புகழ்பெற்ற சார்லஸ் பிரிட்ஜில் தெருப்பாடகர்களின் இசையை கைப்பிடிச்சுவரில் சாய்ந்து நின்றபடியே ரசித்திருக்கிறேன்.
கடைசியாக பேசிய பிரம்மராஜன்,பெரும்பாலும் சம காலத்தில் வசிக்கும் இன்னொரு தலையணை எழுத்தாளரைப்பற்றியே பேசி போரடித்துவிட்டார். ஆல மரத்துக்கும் உச்சி மரத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் எழுதி வைத்திருக்கிறார் என்றார். கல்யாணவீட்டு மேடைகளில் அரசியல் பேசியது போல எனக்கு தோன்றியது.
பாலா எழுதிய 'துரதிர்ஷ்டம்பிடித்த கப்பலின் கதை'யை ஒரே வாரத்தில் ஷிஃட் போட்டு வாசித்து முடித்தேன். அதே கெதியில் விமர்சனமும் எழுதிஅனுப்பினேன் கரிகாலனுக்கு,கணையாழியில் வெளிவந்தது . இப்போது இந்த புத்தகத்தையும் வாசித்தே ஆகவேணும் என்ற ஆவல் காணொலிகள் மூலம் வந்துவிட்டது. எத்தனை காலம் பிடிக்கும் புரிந்து கொள்ள...பார்க்கலாம். இணையவழி ஆணை கொடுக்கலாமா என்ற யோசனையில்..இப்போது :)
பக்கா மசாலா அஞ்சு ரூபா டாக்டர். இடைவேளைக்குப்பிறகு நிறைய வெட்டியிருக்கலாம். இன்னமும் க்ரிஸ்ப்பாக வந்திருக்கும். கடைசீல ரெண்டு வசனம் பேசி, கையை உயர்த்திக்காட்டினதுக்கா இவ்வளவு பெரிய கட்சி மெர்சலாகிக்கெடக்கு. அடக்கருமமே. பயம்..வேறொண்ணுமில்ல. அவ்வளவு சீரியஸால்லாம் இத எடுத்துக்கொள்ள வேண்டியதேயில்லை. அப்படியே விட்ருந்தா எப்பவும் உள்ளது தானேன்னு போயிருக்கும்.மெர்ஸல்VSமோடின்னு ஹாஷ்டேக் வெக்கிற அளவுக்கெல்லாம், அதுவும் அகில இதிய ட்ரென்ட் அடிக்கிற லெவலுக்கு...ஹிஹி...ஒண்ணுமே இல்லீங்ணா. 'பிஜேபி வந்தாலும் வரும்' சண்டைக்கின்னு விஜயோ இல்ல அட்லியோ நினைச்சிக்கூட பாத்துருக்க மாட்டாங்க.ஹிஹி அந்த கடைசி சீன் வசனங்களெல்லாம் கட் பண்ணா மேரியே தெர்ல..ஹிஹி..முழுக்க ஓடுதுங்ணா. பெங்களூர்ல சில இடங்கள்ல இருக்கும் தியேட்டர்களில் தான் பிரச்னை. அதுவும் லோக்கல் காங்கிரஸ் கவுர்மென்டு தமீழ்ஸ் ஓட்டு சிக்காங்கில்லா'ன்னு பயந்து ஆதரிச்சதால வந்த பிரச்னை அத விடுங்க.
பாரீஸில் வேட்டி உடுத்தி வரும் தமிழனை சீண்டிப்பார்க்கும் உள்ளூர் போலீஸ், அப்புறம் அவர் டாக்டர்னு காமிக்கிறதுக்கு எங்கயோ லாபில விழும் பெண்ணைக் காப்பாற்றுவது, எம்ஜியார் இப்டித்தான் செவனேன்னு அவர்பாட்டுக்கு வீட்டுக்கு ஓடு அடுக்கிக்கிட்டு இருப்பாரு எங்கியோ, அஞ்சு தெரு தள்ளி காருக்கு குறுக்கா வந்துவிடும் ஆட்டுக்குட்டியை அத்தனை வீட்டு ஓட்டையும் ஒடச்சி போட்டு வந்து காப்பாத்துவார்.அது மாதிரி இங்க.. ஹிஹி..
படத்துல தேடிப்பார்க்க வேண்டியிருப்பது ஆஸ்கார் நாயகன் தான். எவ்வளவு வயசாயிடுச்சி அவருக்குன்னு இப்பதான் தெரியுது.பாட்டெல்லாம் எங்கெங்கயோ வந்து விழுது,புனே'யில் மல்யுத்தத்திற்கு பிறகு வர்ற இசையெல்லாம் வெண்டாவி அத்து வரும்வேளையில் அண்டங்காக்கா கரைந்த மாதிரி சூழலுக்கு ஒவ்வாத மெட்டுகள்.. சின்னப்பசங்கள வெச்சு இசைக்க விட்டுருக்கணும். பேசும் போதும் பின்னால ஹார்மனில்லாம் தேவையா. வசனமே கேக்கல.
வில்லனுக்கு பஞ்சமா? இப்பல்லாம் எஸ் ஜே சூரியா அடிக்கடி இந்த மாதிரி வர்றார். ப்ரகாஷ் ராஜ்,சாயாஜி ஷின்டேக்கெல்லாம் வயசாயிடுச்சி போல.இவ்வளவு இங்கிலீஷெல்லாம் பேசுற நித்யா மேனனுக்கு மொத்த ஆஸ்பத்திரியையே எழுதிக்கொடுக்கும் போது என்னெ ஏதூன்னு கேக்கத்தோணலியா..ஹ்ம்..?
மூன்று தலைவிகளையும் அவரவர்க்கேத்த இடத்தில் வைத்திருந்தாலும் அந்த ரோஸ்மில்க் அக்கினேனி பாக சால உந்தி அட்லி.. 'நானாவது அஞ்சு நிமிஷம் பஞ்ச் பேசி அடிப்பேன், அவன் அடிச்சிட்டுதான் பேசவே ஆரம்பிப்பான்னு' தன்னையே கலாய்த்துக்கொள்ள அனுமதித்த விஜய்க்கு ரொம்ப நாளைக்கிப்பிறகு ஒரு செம ஹிட். ஆஹா மறந்துட்டேன்.. ஜோஸஃப் விஜய்க்கு மெர்சல் ஹிட்டுங்ணா <3 br=""> 3>
Pre-order Taylor Swift's new album, reputation, including "Look What You Made Me Do," here: http://smarturl.it/reputationTS http://vevo.ly/MOlgkR
Look What You Made Me do! Taylor Swift புதுப்பாடல். வழக்கம்போல
இருக்கும் பெப்பி திங் மிஸ்ஸிங். வழக்கமான பாப் இசைதான். ஒண்ணும்
வித்தியாசமில்லை. இருக்கிற அனோரெக்ஸிக் பாடிக்கு சும்மா ஒப்பனை இல்லாம
வந்தாலே எலும்புக்கூடு மாதிரி தான் இருப்பாங்கோ :)
இதுல ஸ்கெலிடன் மேக்கப் வேறயா? ரெப்பூட்டேஷன் ரொம்பவே கலங்கி கிடக்கு போல.
ஹிஹி அது என்ன லிப்ஸ்டிக்கா இல்லை ஏஷியன் பெயின்ட்ஸா ?! ‘மறக்க
முடியுமா'ன்னு ஒரு பழைய படம். எஸ் எஸ் ஆர் நடிச்சது. அதுல கடைசி சீன்ல இது
மாதிரி தான் அவங்க அந்தப்படத்தில நடிச்ச
கேரக்டரைப் பற்றி சொல்லி பின்னர் மறக்க முடியுமான்னு கேக்கற நாடகத்தனம்
மாதிரி , இங்க டெய்லர் ஸ்விஃப்ட் கட்டின அத்தனை வேஷமும் ஒண்ணா
நின்னுக்கிட்டு.. ஹ்ம். என்னத்த சொல்றது? பல இடங்களில் இவரின் முகம்
எனக்கு 'ப்ரிட்னி ஸ்பியர்ஸ்' போலவே தோணுகிறது.
இதுல ஹாப்பிட் மாதிரி என்விரான்மெண்ட் எல்லாம் க்ரியேட் பண்ணி… ம்யூஸிக்
வீடியோக்கு மெனக்கிட்ட மாதிரி கொஞ்சம் பாட்டுக்கும் 'கிட்டி'ருக்கலாம்.
ரெப்பூட்டேஷன்னு பேர் வெச்சதுக்கு 'ரெற்றொஸ்பெக்ட்'ன்னு வெச்சிருக்கலாம்.
எல்லாக் கலைஞர்களும் இது போன்ற ஒரு நிலைக்கு வந்து செல்வர்னுதான்
நினைக்கிறேன். வரிகளும் சொல்லிக்கிர்ற மாதிரி இல்லை ..இந்த நாலு வரிய வேணா
சொல்லலாம்.
The world moves on, another day, another drama, drama But not for me, not for me, all I think about is karma And then the world moves on, but one thing's for sure Maybe I got mine, but you'll all get yours
ஹே டி எஸ் ,Look What You Made Me do! Look what you just made me do ;) ;) .