Tuesday, March 4, 2014

சிறுகுமிழி

குங்குமம் வார இதழில் வெளியான கவிதை



படகைப்பற்றி
எழுதிக்கொண்டிருக்கிறேன்
அதன் போக்கில் நீரில்
அலைந்து ஆடிக்கொண்டிருந்தது.
ஆகட்டும் என்று
அதற்குள் புகுந்துவிட்ட
நீரைப்பற்றி எழுதுகிறேன்
படகும் கூர்ந்து கவனிக்கிறது
‘மிதப்பது மூழ்க மட்டுமே’ என்ற
என் வரியைப்பற்றி
சிலாகித்துச்சொல்லிக்கொண்டே
கடைசியாக நீரில் அமிழ்ந்து
மூழ்கி வெளிவிட்டது
ஒரு சிறுகுமிழியை
எனக்காக.

.

2 comments:

  1. அருமை...

    குங்குமம் இதழில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete