Monday, April 29, 2013

அப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்





எல்லோருக்கும் பிடித்தசுஜாதா பின்னர் எல்லோருக்கும் பிடித்த அவரது தேசிகன் மற்றும் நேசமிகு ராஜகுமாரன் (என்ன அருமையான பெயர் :) ), மணிகண்டன், ரா.விநோத்பின்னர் ஞானுமாக எல்லாருமாச்சேர்ந்து கப்பன் பூங்காவில் ஒரு மூலையில் உட்கார்ந்துபேசிக்கொண்டிருந்தோம் நேற்று  28 ஏப்ரல்2013,  மங்கிய மாலைப்பொழுது , வெய்யில் முற்றுமாகத்தணிந்து குளிர்ந்துகிடந்தது புல்தரை. வழக்கம் போல வட்டமாக அமர்ந்துபேசத்தொடங்கினோம். எனக்கு கொஞ்சம் வந்து சேர்வதற்கு நேரமாகிவிட்டது. ஆச்சரியம் 6-7பேர்களே வந்திருந்த கூட்டம் ஆரம்பித்தேவிட்டது. கடைசியாக நானும் சேர்ந்துகொள்ளஅறிமுக சுற்றுக்குப்பின் , ராஜகுமாரன் “ஃபோட்டோ” எடுத்துருங்க , பின்னர்ஆரம்பிக்கலாம் என்றார்.

ஃபோட்டோ சுற்று முடிந்து,அறிமுகச்சுற்று ஆரம்பித்தது. ரா.விநோத் நிறையப்பேசினார். அரசியல் செய்திகள்சேகரிப்பது பற்றி , உலகின் அழகிய , அவருக்கு மிகவும் பிடித்த நடிகையுடன் காரில் பெங்களூரிலிருந்து மைசூர் வரை பயணித்து ( பேட்டிக்காகத்தான் சாமி :) ) அளவளாவியதைப்பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்.எங்க விட்டால் இவரது பேச்சிலேயே கூட்டம் முடிந்துவிடுமோ என்று நினைக்குமளவிற்கு.பின்னர் அவரவர் அறிமுகம் நடந்தேறியது. திருஜி மிகவும் குறைப்பட்டுக்கொண்டார் ,தேசிகன் மிகக்குறைவாகவே எழுதுவதாக. மணியும் சேர்ந்து பேசினார். ராஜேஷ் தொடர்ந்து சுற்றிசுற்றி  (அஞ்சு பேர எத்தன ஃபோட்டோதான் எடுக்கிறது ?! )போட்டோ எடுத்துக்கொண்டேயிருந்தார்.

நூல் வெளியிடப்பட்டது ,ராஜகுமாரன் வழங்க வினோத் பெற்றுக் கொண்டார். நேசமிகு ராஜகுமாரன் ஏற்கனவே எழுதி வைத்துக்கொண்டு வந்திருந்த உரையைப் படிக்கத்தொடங்கினார்.  தமக்கு சிங்கப்பூரில் ஒரு இதுபோன்ற ஒரு விழாவில்கலந்துகொள்ள இருந்தது கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டது பற்றி சொன்னார். பின்னர்நிறைய சிறுகதைகளைப் பற்றிசிலாகித்துப்பேசினார். பூபி,பாபி ,வின்னி போன்ற கதைகள்பற்றி குறிப்பாக விவாதித்தார். அப்பாவின் ரேடியோ’ கதையைப்பற்றிக் குறிப்பிடுகையில், அவரின் கிராமத்திலேயே தமது வீட்டில் மட்டுமே முதன்முறையாக ரேடியோ வந்ததையும், முதல்மின்சார சுடுகாடு வந்து அதில் தம் அன்னையை கொணர்ந்து சேர்த்ததையும் , அதுபற்றியஒரு சிறுகதை ஆனந்தவிகடனில் வெளிவந்து அனைவரின் பாராட்டுகளைப் பெற்றதையும்பகிர்ந்துகொண்டார். மேலும் தேசிகனின் தொகுப்பு சிறுகதைகளும், கட்டுரைகளுமாகப் பின்னிக்கிடப்பதைச்  சுட்டிக் காட்டினார். பின்னர் விழா நாயகனைப்பேச அனைவரும் கேட்டுக்கொண்டனர். எல்லோரும் பேசி முடிக்கட்டும் அணிந்துரையாக எனது இருக்கட்டும்என்று கூறிவிட்டு , விநோத்தை பேசப்பணித்தார்.



விநோத் எல்லோரையும் போல , ‘இப்போதெல்லாம்நான் சிறுகதைகள் வாசிப்பதேயில்லை’ , இந்தத் தொகுப்பு என்னை வாசிக்கத் தூண்டிவிட்டதுஎன்று ஆரம்பித்து , வின்னி என்ற சிறுகதையைப்பற்றி தமது ஆரம்ப பள்ளிக்காலஅனுபவங்களுடன் ஒப்பிட்டு பேசத் தொடங்கினார், வெகு சுவாரசியமாக இருந்தது அவர்பேச்சு. “ராகவன் ராகபன்” என்ற கதையில் வரும் பாத்திரப்பெயர்களை சொல்லி ரசித்துக் கொண்டதாக பேசிக் கொண்டிருந்தார். இருப்பினும் கூட்டம் குறைவாகவே இருந்ததால் பேசுவதற்குஅனைவர்க்கும் வெகு நேரம் கிடைத்தது. திருஜி இன்னும் தொகுப்பை வாசிக்கவில்லை என்றுநான் நினைத்ததையே சொன்னார்.

என் பங்குக்கு ,இப்போதெல்லாம் சிறுகதை வாசிப்பு குறைந்துவிட்டது. அதனால் கவிதை (?) எழுதத் தொடங்கிவிட்டகதையை ராஜகுமாரனிடம் சொன்னேன். அப்ப்டியெல்லாம் ஒன்றுமில்லை , வாசிக்க நினைப்பவர் தேடிப்பிடித்து வாசிக்கத்தான் செய்கின்றனர், நீங்க விகடனுக்கு எழுதி அனுப்புங்கஎன்று கூறினார்   ( உடனே வந்துவிடும் :) :) )

கடைசியாக தேசிகன் பேசத்தொடங்கினார்.கதை எழுதியதை விட அவர் எங்கனம் சுஜாதாவிடம் ஒரு கதையை எழுதிக்கொண்டுபோய் காண்பித்தகதையை விலாவாரியாக ரசித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட எட்டு வாரங்கள், ஒவ்வொரு வாரமும் கதையைத்திருத்தி திருத்தி எழுதிக்கொண்டு போய் ஆசானிடம்காண்பித்த ‘காதையை’ப் பற்றி சிலாகித்துக்கூறினார். எட்டுப்பக்கங்களை ஐந்துபக்கங்களாக்கு , முதல் பாராவும் கடைசிப்பாராவும் அருமை , இடையில் எல்லாவற்றையும் மாற்றிவிடு, அந்தப்பையனை ரொம்ப நோஞ்சானாகக்காட்ட முயற்சி செய், ப்ரிண்டவுட்எடுத்துக்கொண்டுவா , திரும்பத்திரும்ப வரும் சொற்களை நீக்கு , இப்படியான கட்டளைகளை சிரமேற்கொண்டு ,விடாமுயற்சியுடன் உருப்பெற்ற அந்தக்கதை, ஒரிஜினல் கதையை விடசிறப்பாக இருந்தது :). அதை அவர் சொல்லியவிதமும்அருமை.




‘பிச்சை’ என்றகதைக்குத் தலைப்பை ‘பிச்சைப்பாத்திரம்’ என்றே வைத்திருந்ததாகவும் பின்னர் விகடனில்அது ‘பிச்சை’யாக மாற்றப்பட்டதையும் கூறினார். தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தஓருவரின் பின்னணியில் அந்த ‘நான் கடவுள்’ படத்தின் பாடல் எழுதத்தூண்டியதாகசொன்னார்.இப்படி ஒவ்வொரு கதையுமே எதோவொரு சம்பவத்தின் உந்துதலாக, அல்லது தமதுவாழ்வில் முன்னரே நடந்த விஷயங்கள் தம்மை எழுதத் தூண்டியதாகவுமே கூறிக்கொண்டிருந்தார். “இரண்டு மணி நேரத்தில் ஒரு சிறுகதை எழுதிக்குடுங்க’ என்றுசொன்னால் தன்னால் எழுதவே இயலாது என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆசானுடன் பயணித்தகாலங்களைப்பற்றிய அவர் அனுபவங்கள் , கதைகளை எங்கனம் எழுதுவது என்று அவர் கொடுத்த அறிவுரைகள் ..ஹ்ம்...நமக்குத்தான் அந்தக்கொடுப்பினை இல்லை :(.. எல்லாமாகச் சேர்ந்து ஒரு புதுவித அனுபவமாகஎனக்கு வாய்த்தது.

தேசிகன்  எப்போது எழுதத்தொடங்கினார், எவையெல்லாம், எதெல்லாம்அவரை எழுதத்தூண்டியது என்ற விஷயங்கள் வெகு சுவாரசியமாக இருந்தன. வீட்டிலிருக்கும்சிறு குழந்தைகள் , பெரியவர்கள் செய்யும் எல்லாச்செயலையும்! தாமும் செய்து பார்க்கஎத்தனிப்பது போல, அம்மா சமையல் செய்தால் தாமும் செய்ய முயற்சிப்பது , அப்பா பைக்ஓட்டினால் தாமும் ஓட்டிப்பார்க்க நினைப்பது போன்றே , சுஜாதா எழுதுகிறார் அதுபோலவே நானும்சிறுகதை, கட்டுரை எழுத முயற்சிக்கிறேன் என்று கூறியது ரசிக்கும்படி இருந்தது.

பின்னர் ஒவ்விரு கதையும்எவ்வாறு கதையாக உருவெடுத்தது என்ற கதையை சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கதையில்வரும் பாத்திரங்கள் எல்லோரும் எதோ ஒரு காலத்தில் தேசிகனுடன் பயணித்தவர்களாகவேஇருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் நாஸ்ட்டால்ஜியா கலந்த குறிப்புகளாகவேகதைகள் அனைத்தும் இருக்கும் என்றே நினைக்கிறேன். இன்னும் தொகுப்பை வாசிக்கவில்லை ,வாசித்த பின்னர் ஒரு விமர்சனக்கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன்.

விவாதிக்க மேலும்விஷயங்களில்லை என்ற அந்த மங்கிப்போன மாலைப் பொழுதில் பின்னர் இன்னொரு கூட்டத்தில்சந்திக்கலாம் என்று நேசகுமாரனும், தேசிகனும் விடை பெற்றுச்சென்ற பின் , மணி, நான், விநோத் ,மற்றும் ராஜேஷ் எல்லாருமாச்சேர்ந்து அப்போது எடுத்த புகைப்படங்களைபார்த்துக் கொண்டிருந்தோம். இனி வரும் கூட்டங்களை எங்கு நடத்துவது , யாரை அழைப்பதுஎன்று பேச்சு வேறு திசை நோக்கிச்சென்றது. எல்லாம் முடிந்த பின்னர் சிவகுரு, மணியின் பைக்கில் அமர்ந்து கொண்டு கையசைத்து விடை பெற்றுச்சென்றார். நானும் திருஜியும் கொஞ்சம் காலார நடந்துகொண்டு கூட்டம் பற்றி அசை போட்டுக்கொண்டே சென்றோம்.. :)

ஞாயிற்றுக்கிழமைமாலை கூட்டம் சேராதது ஒரு குறை, பின்னரும் சனிக்கிழமை நடைபெற இருந்த கூட்டம்ஞாயிற்றுக்கிழமையாக மாற்றப்பட்டதும் ஒரு காரணம்.ஹோசூர் கோஷ்ட்டி வராமற் போனதும் குழு சிறுத்துப்போனதற்கு ஒரு பெரிய காரணம்...இப்படி பல காரணங்கள்..! :) கூட்டம் அதிகமில்லாமற் போனாலும் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் நல்ல அனுபவங்களாகவே அமைந்தது.

.

.

Thursday, April 25, 2013

புகைப்படம்



என் கல்லூரி நாட்களின்
புகைப்படங்களை வைத்து
ஒவ்வொன்றாகப்
பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.


‘அம்மா இது யாரும்மா ?’

‘இது, அப்ப இது ?’

ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டே
வந்தேன் நான்


‘அம்மா இது யாரும்மா’
என்ற கேள்வி அங்கேயே
தொக்கி நின்றது


‘என்னம்மா மறந்துபோச்சா’
என்ற கேள்விக்கு
‘அது மட்டும் மறக்கவேயில்லை’
என்று கூற
ஏனோ எனக்குத் தோணவில்லை


 .

Saturday, April 20, 2013

பொதிவு



இப்போதெல்லாம் அதனைப்
பிறர் முன்னிலையில்
எடுத்துக் கொள்ள
நாணப்படத் தேவையில்லை
குளியலறைப் பொருட்களோடு
அவையும் அடுக்கித்தான்
வைக்கப்பட்டிருக்கின்றன
அலங்கார விளக்குகளோடு

எனினும் அந்தக்கடைக்காரன்
பில் போட்டவுடன்
கருத்த பிளாஸ்டிக் பையில்
தனியாகப் பொதிந்து
கொடுப்பது மட்டுந்தான்
என்னை என்னவோ செய்கிறது.





.

Monday, April 15, 2013

கேள்



காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால்
அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது

ஃபீனிக்ஸின் இறகுகளைக்கேட்கலாமென்றால்
முழுதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமெனத் தெரிகிறது.

சாதகப்பறவையைக் கேட்கலாமென்றால்
பெருமழை வேண்டிக்காத்துக்கிடக்கச் சொல்கிறது

அன்னப்பறவையைக் கேட்கலாமென்றால்
நீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது

மானின் விழிகளைக்கேட்கலாமென்றால்
அதன் மருட்சியில் மனமே துவண்டு கிடைக்கிறது

உன் மனத்தைக் கேட்கலாமென்றால்
அது நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கிறது


.

Wednesday, April 10, 2013

மாயை




எந்த மனநிலையிலிருப்பினும்
ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,
இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும்
ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,
எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்
வெகு உயரே பறக்கும் ஒரு பறவை
என்னை அவதானிக்கவைத்துவிடுகிறது,
மனம் போன போக்கில்
எங்கு சென்றாலும் எதோ ஒன்று
என் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.


இப்படியாகவே இருக்கும்
என்னைத்தொடர்ந்தும்
உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பவனுக்கு
ஒரு காட்சியாகவே
எப்போதும் நான்
இருந்துகொண்டுதானிருக்கிறேன்.



Friday, April 5, 2013

நிறைவு



மட்பாண்டம் செய்யும் குயவனுக்கு
அதில் தண்ணீர் குடித்தவனின் இன்சொல் நிறைவு,

பலவேடங்கள் கட்டி நடிக்கும் நடிகனுக்கு
திரை நோக்கி வீசப்படும் காசுகள் நிறைவு

பாடங்களைத்திறம்பட நடத்தும் ஆசிரியருக்கு
கற்றுத்தேர்ந்த மாணவனின் உயரம் நிறைவு

வெகுநேரமாகக் காத்திருக்கும் காதலிக்கு
காதலனின் கெஞ்சல் நிறைவு

தோல்வியால் கீறிக்கிழிந்த இதயத்துக்கு
நல்ல இசை நிறைவு

பிளந்து கிடக்கும் பாலைநிலத்துக்கு
அவற்றை நிரப்ப வரும் மழை நிறைவு

நல்ல வரிகள் தேடி வந்த வாசகனுக்கு
இந்தக்கவிதை நிறைவு.


.